நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்!
Jul 22, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர், முன்னாள் தலைமை செயலாளர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.

பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு, கால நிர்ணயம் செய்வது மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை ஏற்று விளக்கமளிக்க முன்னாள் மற்றும் தற்போதைய தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகினர்.

அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம் தரப்பில், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க கால நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு ஜூன் 16-ம் தேதி கூடி வேலை கோருவோரின் பட்டியலை மாநில அளவில் பராமரிப்பது என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து முன்னாள் மற்றும் தற்போதைய தலைமை செயலாளர் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உரிய விளக்கம் அளித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.  மேலும், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக அரசு பணியாளர் விதிகளில் இரண்டு வாரங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, திருத்தம் செய்யப்பட்ட நகலை 3 வாரங்களில் உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பார்வைக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

Tags: madras high courttamil nadu governmentChief Secretary appear in courtformer Chief Secretary appeared in person
ShareTweetSendShare
Previous Post

‘காந்தாரா சேப்டர் 1’ படப்பிடிப்பு நிறைவு – மேக்கிங் வீடியோ வெளியீடு!

Next Post

திருப்பூர் : ரெட் டாக்ஸி ஓட்டுநர் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல்!

Related News

பிரேசில் : நேரலையில் பெண்ணின் உடலை கண்டுபிடித்த செய்தியாளர்!

சதுரகிரி : ஆடி அமாவாசையை முன்னிட்டு குவியும் பக்தர்கள் கூட்டம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டம்!

ஐஎம்எப்-ல் இருந்து பதவி விலகும் கீதா கோபிநாத்!

கோவை : பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனத்திற்கு அனுமதி!

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை : பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

பிரிட்டன் உட்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படையினர்

வங்கதேசம் : விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில் இயந்திரம் : 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு!

ரூ 2.7 கோடிக்கு புதிய போர்ஷே கார் அறிமுகம்!

ஜெகதீப் தன்கர் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து!

புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் கொலை : வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies