ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் பாதுகாப்புப் பணிகளும், சோதனை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனிடையே, மலை அடிவார பகுதிகளில் போதிய மின்விளக்குகள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரப் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.