"த்ரிஷ்யம்" பாணியில் கொடூரக் கொலை - மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!
Jul 23, 2025, 12:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

த்ரிஷ்யம் படப் பாணியில் நடந்த கொலை மும்பையை அலறவிட்டுள்ளது. வீட்டில் கணவனைக் கொன்று புதைத்துவிட்டு மாயமான மனைவி சிக்கியது எப்படி?… பகீர் கிளப்பும் பின்னணியுடன் பார்க்கலாம்… விரிவாக.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம்தான் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை.

இத்திரைப்படம், தமிழ், இந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

இதுபோன்ற சம்பவம்தான் மும்பையை அலறவிட்டிருக்கிறது. ஆனால் கதைதான் வேறு. மும்பையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான விஜய் சவான். 15 நாட்களாக அவரை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. விஜய் சவானின் வீட்டிற்குச் சென்ற அவரது சகோதரர்கள் அண்ணனைப் பற்றி விசாரிக்க, விஜய் வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார் மனைவி கோமல் சவான்.

விஜய் பற்றிய துப்பு கிடைக்காத நிலையில், சில நாட்கள் கழித்து சவான் வீட்டிற்குச் சென்ற சகோதரர்களுக்கு, வீடு பூட்டப்பட்டிருப்பதும், கோமல் சவானின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், அறை ஓரத்தில் சம்பந்தமே இல்லாமல் புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்த பகுதியை தோண்டத் தொடங்கினர். துர்நாற்றம் வீச, விஜயின் ஆடையை முதலில் வெளியே வந்தது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் 4 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு, சிதைந்த நிலையிலிருந்த விஜய்யின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

அண்மையில் விஜய் மனைவி கோமல் சவான், வீட்டிற்குக் கூலித்தொழிலாளரை அழைத்து வந்து, 4 அடி ஆழக் குழி தோண்டியதும், மற்றொரு நாளில் வேறொரு தொழிலாளியை வைத்து அதே இடத்தில்  டைல்ஸ் பதித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதிய வீடு வாங்கத் திட்டமிட்டிருந்த விஜயின் வங்கிக்கணக்கில் இருந்து, லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

20 வயது கல்லூரி மாணவர் மோனு என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கோமல் சவான், தனது 8 வயது மகனுடன் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில்,  அவர்கள் பிடிபட்டால்தான் கொலை எப்படி நடந்தது என்பது தெரியவரும் என்பதால் போலீஸ் விசாரணை நீண்டுள்ளது.

Tags: mumbaicrime news todayBrutal murder in the style of "Drishyam" - the Bagheer incident that shocked Mumbaiமும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்"த்ரிஷ்யம்" பாணி
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

Next Post

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies