பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி - இந்தியாவிற்கான சவால் என்ன?
Mar 15, 2026, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

Murugesan M by Murugesan M
Jul 22, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை பதவி நீக்கம் செய்துவிட்டு, அசிம் முனீர் அதிபர் பதவியைக் கைப்பற்றுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசிம் முனீர் பாகிஸ்தானின் அதிபரானால்  பிரதமர் ஷெரீப்பின் நிலை மற்றும் பாகிஸ்தானின் நிலைமை என்னவாகும் ?  என்பது  பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இன்றைய சுழலில், பாகிஸ்தானில் அதிகபட்ச அதிகாரம் மிக்க மனிதர் யார் எனக் கேட்டால், ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர்தான். சாதாரண இஸ்லாமிய மதபோதகரின் மகனாகப் பிறந்த அசிம் முனீர், ஒரு சராசரி வீரராகப் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி,  உளவுத் துறைத் தலைவர், ராணுவ புலனாய்வு தலைவர்  என வளர்ந்து, பாகிஸ்தானின் இராணுவத் தலைவரானார்.

பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்கு முன்னதாக, வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மாநாட்டில் பேசிய அசிம் முனீர், இரு நாடுகள் கோட்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு நாடுகள் என்றும், பாகிஸ்தானியர்கள் இந்துக்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டவர்கள் என்றும் கூறினார்.

ஒவ்வொரு பாகிஸ்தான் குடிமகனும், பாகிஸ்தான் எவ்வாறு பிறந்தது என்ற வரலாற்றைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றும், வலியுறுத்தினார். கூடுதலாக, காஷ்மீரை பாகிஸ்தானின் “கழுத்து நரம்பு” என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து,பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதற்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது.  அசிம் முனிரின் தலைமையில் பாகிஸ்தானின் இராணுவம் இந்தியாவால் அவமானகரமாகத் தோற்கடிக்கப் பட்டது. அப்போதே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பிரதமர் ஷெரீப்பை குறிப்பிடாமல் அசிம் முனீர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காகவும், எதிரிகளைத் தோற்கடித்ததற்காகவும்  ஃபீல்ட் மார்ஷலாக பதவி ஏற்கிறார் என பாகிஸ்தான் பிரதமர்  ஷாபாஸ் ஷெரீப்பை  அறிவிக்க வைத்து, தன்னை தானே ஃபீல்ட் மார்ஷலாக உயர்த்திக் கொண்டார் அசிம் முனீர்.

ஃபீல்ட் மார்ஷலாக அசிம் முனீரின் பதவி உயர்வு, அரசின் மீதான அவரின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியது. பாகிஸ்தானின் “சிறந்த மீட்பர்” என்ற  பிம்பத்தைத்  தமக்கு ஏற்படுத்திக் கொண்ட அசிம் முனீர், தன்னை இரண்டாம் முஷாரஃப் ஆக நிலை நிறுத்திக் கொண்டார்.

இதற்கெல்லாம் முன்னதாக,  தனது இராணுவத் தலைவர் பதவிக்காலத்தை  மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாக  நீட்டிக்கும் வகையில் விதிகளை மாற்றிக் கொண்டார். தொடர்ந்து, பொதுமக்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளித்ததன் மூலம் தனது அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொண்டார்.

இதற்கிடையே, அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, மதிய விருந்து கொடுத்து உபசரித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தச் சந்திப்பு, அசிம் முனீரின் செல்வாக்கை வெளிக்காட்டியது. சுவாரஸ்யமாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்னும் ட்ரம்பைச் சந்திக்கவில்லை.

பிரதமரின் அனுமதி இல்லாமலேயே இலங்கை மற்றும் இந்தோனேசியா சுற்றுப்பயணங்களை அசிம் முனீர் மேற்கொள்ள இருக்கும் நிலையில்,  நாட்டின் அதிபர் அதிகாரத்தையும்  அசிம் முனீர் கைப்பற்றி விட்டாரா  என்ற கேள்வி  எழுந்துள்ளது.

முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப்  ஒரே நேரத்தில் இராணுவத் தலைவராகவும், அரசின் தலைவராகவும் செயல்பட்டது போலவே அசிம் முனீரும் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இராணுவப் புரட்சி மூலம் 1999ம் ஆண்டு பர்வேஸ் முஷாரஃப் நாட்டின் அதிபராக, ஒன்பது ஆண்டுக்காலம்  ஆட்சியிலிருந்தார்.  அவரது ஆட்சிக்காலத்தில் பதவிக்கு வந்த நான்கு பிரதமர்களும் பலவீனமானவர்களாகவே இருந்தனர்.

வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அரசின் அனைத்து முடிவுகளும்  ராணுவத் தலைமையகத்திலிருந்து நேரடியாக வந்தன. நாடாளுமன்றம்  ஒரு ரப்பர்-ஸ்டாம்ப் நிறுவனமாகச் செயல்பட்டது.  வற்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் மூலம், நீதித் துறை வழிநடத்தப்பட்டது.

அதுபோல அசிம்  முனீர், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதை  முஷாரஃப் 2.0 என்று சொல்லப்படுகிறது.  அமைச்சகங்களுக்கு நேரடி உத்தரவுகளை அசிம் முனீர் வழங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆட்சிக்கவிழ்ப்பு ஏதும் நடக்காமல்,மென்மையான முறையில், அதிபர் சர்தாரியை தன் வழியிலிருந்து விலக வைத்து விடுவார் என்றும், அசிம் முனீர் அதிபர் பதவிக்கு வருவது காலத்தின் கட்டாயமாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அமெரிக்கா, சீனா மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் ஒரு நிலையான அரசைத் தரும் அசிம் முனீரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தயங்காது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ISI யின் முன்னாள் தலைவராக இருந்த அசிம் முனீர்,பாகிஸ்தானின் அதிபராவது , இந்தியாவுக்கு நெருக்கடிகளையும் சவால்களையும் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு  அதிக அதிகாரத்தை அளிப்பார் என்றும்,  ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்குத் தீவிரமாக உதவுவார் என்றும் கூறப்படுகிறது.

இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பில்லாத சூழலை அசிம் முனீர் உருவாக்குவார் என்றும்,  சீனாவுடனான ஆதரவில், எல்லைப்பகுதிகளில் தாக்குதல்களை அதிகரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அசிம் முனீர் தலைமையில்,ஆப்கானிஸ்தான்,வங்கதேசம் இலங்கை,இந்தோனேசியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன்  இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஆதிக்கம் செலுத்த முற்படும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

ஒரு போரில் தோற்று, பின்னர் ஒரு பெரிய கிரீடத்தைப் பெறுவது பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும். அசிம் முனீர் அதிபராகாமல் போகலாம். ஆனாலும்,  திரைக்குப் பின்னால் இருந்து பாகிஸ்தானில்  அசிம் முனீரே ஆதிக்கம் செலுத்துவார் என்று நம்பப்படுகிறது.

Tags: பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ?Indiapakistanஅசிம் முனீர்pakistan news todayAsim Munir becomes Pakistan's president: Musharraf-style rule - what is the challenge for India?
ShareTweetSendShare
Previous Post

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

Next Post

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies