கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!
Sep 9, 2025, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Web Desk by Web Desk
Jul 23, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோனோ தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிதியுதவி தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் நிதியை வழங்க மறுக்கும் தமிழக அரசால் ஆதரவின்றி தவிக்கும் மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கொரோனா தொற்று பரவல் உச்சத்திலிருந்த நிலையிலும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக பணியாற்றி மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கொரானா தொற்றிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பறிகொடுத்தனர்.

அத்தகைய மருத்துவர்களின் ஒருவராக, முன் களப்பணியாளராகத் தன்னை முன்னிறுத்தி தன் உயிரையும் துறந்த மருத்துவர் விவேகானந்தனுக்குத் தமிழக அரசு இதுவரை எந்தவித உதவியையும் செய்யவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் என அறிவித்த தமிழக அரசு, மருத்துவர் விவேகானந்தன் இறந்த பிறகு, அவருக்கான நிதியைக் கூட வழங்காமல் ஏமாற்றி வருவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்தபடி 50 லட்ச ரூபாய் நிதி வழங்கிய நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் மாநில அரசு நிதி உதவி வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி பலமுறை போராடியும் அரசும், சுகாதாரத்துறையும் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை என மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னுயிரை நீத்த மருத்துவர் விவேகானந்தனுக்கு நிதியுதவியோடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு என்பதை அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கொரோனா பணியில் உயிரிழப்புTamil Naducoronaமருத்துவர்Death due to Corona work: Tamil Nadu government abandoned the doctor's family
ShareTweetSendShare
Previous Post

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Next Post

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Related News

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies