கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!
Oct 25, 2025, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Web Desk by Web Desk
Jul 23, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோனோ தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிதியுதவி தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் நிதியை வழங்க மறுக்கும் தமிழக அரசால் ஆதரவின்றி தவிக்கும் மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கொரோனா தொற்று பரவல் உச்சத்திலிருந்த நிலையிலும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக பணியாற்றி மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கொரானா தொற்றிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பறிகொடுத்தனர்.

அத்தகைய மருத்துவர்களின் ஒருவராக, முன் களப்பணியாளராகத் தன்னை முன்னிறுத்தி தன் உயிரையும் துறந்த மருத்துவர் விவேகானந்தனுக்குத் தமிழக அரசு இதுவரை எந்தவித உதவியையும் செய்யவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் என அறிவித்த தமிழக அரசு, மருத்துவர் விவேகானந்தன் இறந்த பிறகு, அவருக்கான நிதியைக் கூட வழங்காமல் ஏமாற்றி வருவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்தபடி 50 லட்ச ரூபாய் நிதி வழங்கிய நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் மாநில அரசு நிதி உதவி வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி பலமுறை போராடியும் அரசும், சுகாதாரத்துறையும் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை என மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னுயிரை நீத்த மருத்துவர் விவேகானந்தனுக்கு நிதியுதவியோடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு என்பதை அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கொரோனா பணியில் உயிரிழப்புTamil Naducoronaமருத்துவர்Death due to Corona work: Tamil Nadu government abandoned the doctor's family
ShareTweetSendShare
Previous Post

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Next Post

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies