கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!
Aug 12, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Jul 23, 2025, 08:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொரோனோ தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிதியுதவி தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் நிதியை வழங்க மறுக்கும் தமிழக அரசால் ஆதரவின்றி தவிக்கும் மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கொரோனா தொற்று பரவல் உச்சத்திலிருந்த நிலையிலும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக பணியாற்றி மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கொரானா தொற்றிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பறிகொடுத்தனர்.

அத்தகைய மருத்துவர்களின் ஒருவராக, முன் களப்பணியாளராகத் தன்னை முன்னிறுத்தி தன் உயிரையும் துறந்த மருத்துவர் விவேகானந்தனுக்குத் தமிழக அரசு இதுவரை எந்தவித உதவியையும் செய்யவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் என அறிவித்த தமிழக அரசு, மருத்துவர் விவேகானந்தன் இறந்த பிறகு, அவருக்கான நிதியைக் கூட வழங்காமல் ஏமாற்றி வருவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்தபடி 50 லட்ச ரூபாய் நிதி வழங்கிய நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் மாநில அரசு நிதி உதவி வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி பலமுறை போராடியும் அரசும், சுகாதாரத்துறையும் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை என மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னுயிரை நீத்த மருத்துவர் விவேகானந்தனுக்கு நிதியுதவியோடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு என்பதை அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கொரோனா பணியில் உயிரிழப்புTamil Naducoronaமருத்துவர்Death due to Corona work: Tamil Nadu government abandoned the doctor's family
Share
Tweet
SendShare
Previous Post

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Next Post

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies