அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி பிரிட்டன் நாட்டிற்குப் புறப்பட்டார்
பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாட்கள் அரசுமுறை பயணத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கியுள்ளார்.
முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அழைப்பின்பேரில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி பிரிட்டன் புறப்பட்டார்.
அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், ஸ்டாமரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
குறிப்பாக இந்தியா – பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாட்டுத் தலைவர்களும் கையொப்பமிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.