இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் - என்னென்ன இலாபம்?
Sep 11, 2025, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Web Desk by Web Desk
Jul 25, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து இடையே மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தடையற்ற வர்த்தகம் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தை 120 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் இந்தியா – இங்கிலாந்து இடையே உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் கெய்டர் ஸ்டார்மெரை சந்தித்த பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமாக விவாதித்தார்.

அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இங்கிலாந்து அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா – இங்கிலாந்து இடையே பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கூறினார். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே, இரு நாடுகளுக்கும் இடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளைக் குறைப்பது அல்லது முழுமையாக நீக்குவதுதான்…. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் இங்கிலாந்திலும், இங்கிலாந்துப் பொருட்கள் இந்தியாவிலும் மலிவான விலையில் கிடைக்கும்,

இந்திய ஏற்றுமதியில் 99% பொருட்களுக்கு இங்கிலாந்தில் வரி விலக்கு அல்லது வரி குறைப்பு  கிடைக்கும் என்பதால்,  ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், வாகன  உதிரி பாகங்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள் அதிக லாபம் ஈட்ட முடியும். அதே நேரத்தில்  இவ்வகை பொருட்கள் இந்தியாவில் மலிவு விலையிலும் கிடைக்கும்.

இந்தியாவில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதித்துறைக்கு உத்வேகம் அளிக்கும் இந்த ஒப்பந்தம், இங்கிலாந்து சந்தைகளில் ஐரோப்பிய பொருட்களுக்கு நிகராக இந்திய வேளாண் பொருட்கள் போட்டியிடும் நிலையை உருவாக்கும்.

இந்திய ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து சந்தைகளில் கூடுதலாக 5 சதவிகித இடத்தை கைப்பற்றி  அதிக லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் என்ஜினியரிங் துறைகள் 2030ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு வளர்ச்சியைப் பெறும் என்றும், அடுத்த நிதியாண்டில் ரசாயன ஏற்றுமதி 40 சதவிகித வளர்ச்சியைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஆபரண ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்றும், புதிய ஒப்பந்தத்தால், சேவைத்துறையும் ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.5 பில்லியன் டாலர்கள் கூடுதல் வருமானத்தைப் பெறும். இங்கிலாந்து நுகர்வோர்கள், குறைந்த விலையில் இந்தியப் பொருட்களைப் பெற முடியும். ஸ்காட்ச் விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாகவும், பின்னர் படிப்படியாக 40 சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்பதால் இந்தியாவில் அதன் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும். இதேபோன்று மின்சார வாகனங்களுக்கான வரி 110 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்பதால் அதன் விலையும் குறையும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்து கையெழுத்திட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு இந்த புதிய ஒப்பந்தம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: India joins hands with England: Free trade - what are the benefits?இந்தியா - இங்கிலாந்துதடையற்ற வர்த்தகம்PM Modiindia vs englandபிரதமர் மோடி
ShareTweetSendShare
Previous Post

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Next Post

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies