இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் - என்னென்ன இலாபம்?
Mar 15, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Murugesan M by Murugesan M
Jul 25, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து இடையே மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தடையற்ற வர்த்தகம் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தை 120 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் இந்தியா – இங்கிலாந்து இடையே உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் கெய்டர் ஸ்டார்மெரை சந்தித்த பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமாக விவாதித்தார்.

அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இங்கிலாந்து அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா – இங்கிலாந்து இடையே பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கூறினார். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே, இரு நாடுகளுக்கும் இடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளைக் குறைப்பது அல்லது முழுமையாக நீக்குவதுதான்…. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் இங்கிலாந்திலும், இங்கிலாந்துப் பொருட்கள் இந்தியாவிலும் மலிவான விலையில் கிடைக்கும்,

இந்திய ஏற்றுமதியில் 99% பொருட்களுக்கு இங்கிலாந்தில் வரி விலக்கு அல்லது வரி குறைப்பு  கிடைக்கும் என்பதால்,  ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், வாகன  உதிரி பாகங்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள் அதிக லாபம் ஈட்ட முடியும். அதே நேரத்தில்  இவ்வகை பொருட்கள் இந்தியாவில் மலிவு விலையிலும் கிடைக்கும்.

இந்தியாவில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதித்துறைக்கு உத்வேகம் அளிக்கும் இந்த ஒப்பந்தம், இங்கிலாந்து சந்தைகளில் ஐரோப்பிய பொருட்களுக்கு நிகராக இந்திய வேளாண் பொருட்கள் போட்டியிடும் நிலையை உருவாக்கும்.

இந்திய ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து சந்தைகளில் கூடுதலாக 5 சதவிகித இடத்தை கைப்பற்றி  அதிக லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் என்ஜினியரிங் துறைகள் 2030ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு வளர்ச்சியைப் பெறும் என்றும், அடுத்த நிதியாண்டில் ரசாயன ஏற்றுமதி 40 சதவிகித வளர்ச்சியைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஆபரண ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்றும், புதிய ஒப்பந்தத்தால், சேவைத்துறையும் ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.5 பில்லியன் டாலர்கள் கூடுதல் வருமானத்தைப் பெறும். இங்கிலாந்து நுகர்வோர்கள், குறைந்த விலையில் இந்தியப் பொருட்களைப் பெற முடியும். ஸ்காட்ச் விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாகவும், பின்னர் படிப்படியாக 40 சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்பதால் இந்தியாவில் அதன் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும். இதேபோன்று மின்சார வாகனங்களுக்கான வரி 110 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்பதால் அதன் விலையும் குறையும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்து கையெழுத்திட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு இந்த புதிய ஒப்பந்தம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM Modiindia vs englandபிரதமர் மோடிIndia joins hands with England: Free trade - what are the benefits?இந்தியா - இங்கிலாந்துதடையற்ற வர்த்தகம்
ShareTweetSendShare
Previous Post

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Next Post

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies