18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் - 26வது வெற்றி தினம்!
Jan 14, 2026, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1999ம் ஆண்டு “ஆபரேஷன் விஜய்” நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானைத் தலைதெறிக்க விரட்டியடித்தது நெஞ்சுறுதிமிக்க இந்திய ராணுவப்படை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் போரில் பெற்ற சரித்திர வெற்றியைக் கொண்டாடும் நாள் இன்று.

கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் கொடுமையான காலநிலை வாட்டிய நேரத்தில், குள்ளநரியாக நம் மண்ணில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தைச் சம்மட்டி அடி கொடுத்து விரட்டியது நம் சிங்கப்படை.

1999ம் ஆண்டு மே 3ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து கார்கில் மாவட்டத்திற்குள் மிகப்பெரிய திட்டத்துடன் ஊடுருவியது பாகிஸ்தான் படை… அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப்பின் கண்காணிப்பில்தான் இந்த அத்துமீறலே அரங்கேறியது.

1999ம் ஆண்டு மே 5ம் தேதி ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளுடன் கைகோர்த்து இந்தியாவின் கார்கில் பகுதியை ஆக்கிரமித்த செய்தி, நாடோடி மக்கள் மூலம் கிடைக்க, இந்திய ராணுவம் கிளர்ந்தெழுந்தது. பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்க  “ஆபரேஷன் விஜய்” நடவடிக்கையின் கீழ், தீரத்துடன் போரிட்டது.

கடுமையான குளிர், கரடு முரடான மலைப்பாதை போன்ற சவால்களை மன உறுதியுடன் எதிர்கொண்ட இந்திய ராணுவம், அங்குலம், அங்குலமாகத் தடைகளைத் தகர்த்தெறிந்து பாகிஸ்தான் ராணுவத்தைத் தெறிக்கவிட்டது.

இந்திய விமானப்படை மிக்-21, மிக்-27, எம்.ஐ-17 ஆகிய மூன்று போர் விமானங்களை இழந்தாலும் இழப்புகளைத் தாங்கிக்கொண்ட இந்திய ராணுவம் போரைத் தீவிரப்படுத்தியது. 1999 ஜூன் 9ஆம் தேதி படாலிக் பகுதியில் இரண்டு முக்கிய நிலைகளைக் கைப்பற்றிய இந்திய ராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது.

11 மணி நேரத் தாக்குதலுக்குப் பின்னரும், கற்பனைக்கு எட்டாத மன உறுதியும், உடல் உறுதியும் கொண்ட இந்திய ராணுவம் டோலோலிங் மற்றும் டைகர் ஹில் பகுதியை மீட்டது.

உடலை உறைய வைக்கும் பூஜ்யம் டிகிரி வெப்பநிலை, செங்குத்தான பாறைகளைக் கொண்ட மலைப்பாதை, குறைவான ஆக்சிஜன், இடைவிடாத எதிரிகளின் தாக்குதல் என  நீடித்த போர் உண்மையில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கடுமையான காலநிலையில் நடந்தது.

பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் மலைப்பகுதியை ஜூலை 26-ல் மீட்டு வெற்றிக்கொடி நாட்டியது இந்திய ராணுவம். கார்கில் போரில் 527 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 4000 பேர் மடிந்தனர்.

போரின்போது, கேப்டன் விக்ரம் பத்ரா கூறிய “யே தில் மாங்கே மோர்” என்ற வார்த்தை, இன்று வரை ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆபரேஷன் விஜய் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஜூலை 26ஆம் தேதியான இன்று, கார்கில் போரில், தாய் நாட்டிற்காகத் தீரத்துடன் போரிட்ட வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக  விஜய் திவாஸ் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளில் இந்திய ராணுவத்தின்  ஈடு இணையற்ற மன உறுதி, தியாகம் மற்றும் வீரத்தை என்றென்றும் போற்றி புகழ்பாடுவோம்.

Tags: கார்கில் போர்Historic victory at an altitude of 18 thousands feet: Kargil War - 26th Victory Day!26வது வெற்றி தினம்கார்கில் போர் தினம் இன்று
ShareTweetSendShare
Previous Post

சென்னை : பெண் ஐடி ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

Next Post

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

Related News

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies