திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
திருப்பூரில் ஆண்டுதோறும் இந்து அன்னையர் முன்னணி சார்பில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் தீர்த்த குட அபிஷேக விழா நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து கோட்டை மாரியம்மன் கோயில் வழிபாடு நடத்தினர். முன்னதாக பரதநாட்டியம் மற்றும் சிலம்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.