ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
Jul 27, 2025, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 29 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டு மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் 18 வார்டுகளில் மொத்தம் 29 கழிப்பறைகள் உள்ளன இதில் இரண்டு கழிப்பறைகள் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் மீதி 27 கழிப்பறைகள் இலவச கழிப்பறைகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் விதிமுறையை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து புகார் வந்ததும் கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்வியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.அதில் 18 வார்டுகளிலும் இலவச கழிப்பறைகள் செயல்பட வேண்டும்.

இலவச கழிப்பறைகள் என கழிப்பறைகளுக்கு முன்பு பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என சட்ட விதிகளின்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்ததும் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் , பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தமிழக முதல்வர் என அனைவரிடம் புகார் கொடுத்தும் நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த ஆண்டு கேள்வி கேட்கப்பட்டபோது அந்த கழிப்பறைகளில் தனிநபர்கள் கட்டணம் வசூலித்து வந்ததை மாற்றி தற்போது புதிய உத்தியாக மகளிர் சுயஉதவி குழுக்கள் என்ற பெயரில் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த கழிப்பறைகளை நிர்வகித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உள்கமிஷன் வைத்து இதற்கான ஏற்பாட்டை செய்து ஏழை எளிய மக்களிடம் இலவச கழிப்பறைகளுக்கு 5 ரூபாய் 10 ரூபாய் என கட்டணம் வசூலித்து சுயலாபம் அடைந்து வருகின்றனர்.இதை தடுத்து நிறுத்தி இலவச கழிப்பறைகளுக்கு முன்பு இலவச கழிப்பறை என பெயர் பலகை வைக்க வேண்டும்.

இலவச கழிப்பறைகளை கட்டண கழிப்பறைகளாக மாற்றியதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக நிர்வாகி ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.இலவச கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: thenifree toiletsAndipatti Panchayatfree toilests cash collection issue
ShareTweetSendShare
Previous Post

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies