ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
Jan 13, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 29 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டு மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் 18 வார்டுகளில் மொத்தம் 29 கழிப்பறைகள் உள்ளன இதில் இரண்டு கழிப்பறைகள் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் மீதி 27 கழிப்பறைகள் இலவச கழிப்பறைகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் விதிமுறையை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து புகார் வந்ததும் கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்வியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.அதில் 18 வார்டுகளிலும் இலவச கழிப்பறைகள் செயல்பட வேண்டும்.

இலவச கழிப்பறைகள் என கழிப்பறைகளுக்கு முன்பு பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என சட்ட விதிகளின்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்ததும் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் , பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தமிழக முதல்வர் என அனைவரிடம் புகார் கொடுத்தும் நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த ஆண்டு கேள்வி கேட்கப்பட்டபோது அந்த கழிப்பறைகளில் தனிநபர்கள் கட்டணம் வசூலித்து வந்ததை மாற்றி தற்போது புதிய உத்தியாக மகளிர் சுயஉதவி குழுக்கள் என்ற பெயரில் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த கழிப்பறைகளை நிர்வகித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உள்கமிஷன் வைத்து இதற்கான ஏற்பாட்டை செய்து ஏழை எளிய மக்களிடம் இலவச கழிப்பறைகளுக்கு 5 ரூபாய் 10 ரூபாய் என கட்டணம் வசூலித்து சுயலாபம் அடைந்து வருகின்றனர்.இதை தடுத்து நிறுத்தி இலவச கழிப்பறைகளுக்கு முன்பு இலவச கழிப்பறை என பெயர் பலகை வைக்க வேண்டும்.

இலவச கழிப்பறைகளை கட்டண கழிப்பறைகளாக மாற்றியதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக நிர்வாகி ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.இலவச கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Andipatti Panchayatfree toilests cash collection issuethenifree toilets
ShareTweetSendShare
Previous Post

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies