ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
Sep 1, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 03:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 29 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டு மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் 18 வார்டுகளில் மொத்தம் 29 கழிப்பறைகள் உள்ளன இதில் இரண்டு கழிப்பறைகள் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் மீதி 27 கழிப்பறைகள் இலவச கழிப்பறைகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் விதிமுறையை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து புகார் வந்ததும் கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்வியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.அதில் 18 வார்டுகளிலும் இலவச கழிப்பறைகள் செயல்பட வேண்டும்.

இலவச கழிப்பறைகள் என கழிப்பறைகளுக்கு முன்பு பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என சட்ட விதிகளின்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்ததும் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் , பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தமிழக முதல்வர் என அனைவரிடம் புகார் கொடுத்தும் நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த ஆண்டு கேள்வி கேட்கப்பட்டபோது அந்த கழிப்பறைகளில் தனிநபர்கள் கட்டணம் வசூலித்து வந்ததை மாற்றி தற்போது புதிய உத்தியாக மகளிர் சுயஉதவி குழுக்கள் என்ற பெயரில் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த கழிப்பறைகளை நிர்வகித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உள்கமிஷன் வைத்து இதற்கான ஏற்பாட்டை செய்து ஏழை எளிய மக்களிடம் இலவச கழிப்பறைகளுக்கு 5 ரூபாய் 10 ரூபாய் என கட்டணம் வசூலித்து சுயலாபம் அடைந்து வருகின்றனர்.இதை தடுத்து நிறுத்தி இலவச கழிப்பறைகளுக்கு முன்பு இலவச கழிப்பறை என பெயர் பலகை வைக்க வேண்டும்.

இலவச கழிப்பறைகளை கட்டண கழிப்பறைகளாக மாற்றியதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக நிர்வாகி ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.இலவச கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: thenifree toiletsAndipatti Panchayatfree toilests cash collection issue
Share
Tweet
SendShare
Previous Post

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

Related News

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies