நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் கூறினார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தினர்
இதேபோல் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜயின் வீட்டின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சென்ற போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விஜய் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனைக்கு பிறகு வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.