சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் - பிரதமர் மோடி புகழாரம்!
Jul 30, 2026, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 27, 2025, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ மண்டலம் என கூறியதுடன், நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க எனும் வரிகளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழீசுவரரை வழிபட்டது பெரும் பாக்கியம் என கூறினார். மக்கள் அனைவருக்கும் இறைவன் ஆசி கிடைக்க வேண்டும் என வழிபட்டதாக பேசிய பிரதமர் மோடி, இளையராஜாவின் இசை, ஓதுவார்களின் மந்திரங்கள் தன்னை மெய்மறக்க செய்தன எனவும் தெரிவித்தார்.

மேலும், கங்கைகொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சிவபக்தி கொண்டவர்களின் பெருமை சிவனைப் போல் என்றும் அழியாதது என தெரிவித்தார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெயர்கள் தேசத்தின் அடையாளங்கள் என கூறிய பிரதமர் மோடி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மக்களாட்சியை நடத்தியவர்கள் சோழர்கள் எனவும் தெரிவித்தார்.

அதே போல பொக்கிஷங்களை தவிர்த்து கங்கைநீரை கொண்டு வந்தவர் ராஜேந்திர சோழன் என கூறிய பிரதமர் மோடி, இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை சோழ அரசு நீண்டிருந்தது எனவும் கூறினார். மேலும், சோழர்கள் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டடவியல் அற்புதம் என புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முதன்மையாக திகழ சோழர்களே காரணம் எனவும் தெரிவித்தார். திருமூலரின் அன்பே சிவம் கோட்பாட்டை கடைபிடித்தால் உலகில் வன்முறை இருக்காது என தெரிவித்த பிரதமர், திருமூலரின் வழியில்தான் இன்றைய இந்தியா பயணித்து வருகிறது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 2014க்கு பிறகு 600-க்கும் அதிகமான கலை படைப்புகளை மீட்டுள்ளதாகவும், அதில் 36 கலைப் பொருட்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை எனவும் தெரிவித்தார். மேலும், ராஜேந்திர சோழன் காலத்தில் கடற்படை வலிமை பெற்றதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையை பேண வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, பாரதத்தின் வலிமையை ஆப்ரேஷன் சிந்தூர் உலகிற்கு பறைசாற்றியது எனவும் தெரிவித்தார்.

இந்தியாவை தாக்கினால் எப்படிப்பட்ட பதிலடி கிடைக்கும் என உணர்த்தியதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் ராஜேந்திர சோழனின் பிரமாண்ட சிலையை நிறுவுவோம் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: Namachivaya Vazhaga Nathanthal Vazhagamodi speechprime minister modiGangaikonda Cholapuram.Chola Empire
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Next Post

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies