சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் - பிரதமர் மோடி புகழாரம்!
Oct 9, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

Web Desk by Web Desk
Jul 27, 2025, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ மண்டலம் என கூறியதுடன், நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க எனும் வரிகளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழீசுவரரை வழிபட்டது பெரும் பாக்கியம் என கூறினார். மக்கள் அனைவருக்கும் இறைவன் ஆசி கிடைக்க வேண்டும் என வழிபட்டதாக பேசிய பிரதமர் மோடி, இளையராஜாவின் இசை, ஓதுவார்களின் மந்திரங்கள் தன்னை மெய்மறக்க செய்தன எனவும் தெரிவித்தார்.

மேலும், கங்கைகொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சிவபக்தி கொண்டவர்களின் பெருமை சிவனைப் போல் என்றும் அழியாதது என தெரிவித்தார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெயர்கள் தேசத்தின் அடையாளங்கள் என கூறிய பிரதமர் மோடி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மக்களாட்சியை நடத்தியவர்கள் சோழர்கள் எனவும் தெரிவித்தார்.

அதே போல பொக்கிஷங்களை தவிர்த்து கங்கைநீரை கொண்டு வந்தவர் ராஜேந்திர சோழன் என கூறிய பிரதமர் மோடி, இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை சோழ அரசு நீண்டிருந்தது எனவும் கூறினார். மேலும், சோழர்கள் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டடவியல் அற்புதம் என புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முதன்மையாக திகழ சோழர்களே காரணம் எனவும் தெரிவித்தார். திருமூலரின் அன்பே சிவம் கோட்பாட்டை கடைபிடித்தால் உலகில் வன்முறை இருக்காது என தெரிவித்த பிரதமர், திருமூலரின் வழியில்தான் இன்றைய இந்தியா பயணித்து வருகிறது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 2014க்கு பிறகு 600-க்கும் அதிகமான கலை படைப்புகளை மீட்டுள்ளதாகவும், அதில் 36 கலைப் பொருட்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை எனவும் தெரிவித்தார். மேலும், ராஜேந்திர சோழன் காலத்தில் கடற்படை வலிமை பெற்றதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையை பேண வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, பாரதத்தின் வலிமையை ஆப்ரேஷன் சிந்தூர் உலகிற்கு பறைசாற்றியது எனவும் தெரிவித்தார்.

இந்தியாவை தாக்கினால் எப்படிப்பட்ட பதிலடி கிடைக்கும் என உணர்த்தியதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் ராஜேந்திர சோழனின் பிரமாண்ட சிலையை நிறுவுவோம் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: Namachivaya Vazhaga Nathanthal Vazhagamodi speechprime minister modiGangaikonda Cholapuram.Chola Empire
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Next Post

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

Related News

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies