குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?
Jan 14, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக அறியப்படும் குருகிராம் துர்நாற்றம் வீசும் குப்பை நகரமாகவே மாறிவிட்டது. வாழ்வாதாரத்திற்காக வந்த தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வரும் நிலையில், தன்னிலையை இழந்து தவிக்கிறது இந்நகரம்.

ஓங்கி உயர்ந்த கட்டடங்கள், வசதியான அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், நவீன போக்குவரத்து வசதிகள் என அடுத்த சிங்கப்பூராகவே பார்க்கப்பட்டதுதான் இந்தியாவின் Cyber Hub-ஆன குருகிராம்.

ஆனால் தற்போதோ அதன் நிலைமையே வேறு, எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற காமெடிக்கு பொருந்திப் போய்விட்டது , இந்த நகரம். மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், துர்நாற்றம் வீசும் சாலைகளாலும் நிரம்பியுள்ள குருகிராம் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக அங்குள்ள Ardee city கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியேற்ற தடுப்பு சட்டம் இங்கு மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.  குருகிராம் பகுதிகளில் சுகாதார பணிகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் பெங்காலி மொழி பேசுபவர்கள் தான்… வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களும் பெங்காலி மொழியையே பேசுவதால், வெளிநாட்டினர் எனக் கருதி போலீசார் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.

உரிய ஆவணங்கள் இருந்தாலும், போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து, குருகிராமிற்கு வாழ்வாதாரத்திற்காக வந்த தொழிலாளர்கள் பலர் குடும்ப குடும்பமாக சொந்த ஊருக்கே திரும்பி வருகின்றனர். சுகாதார பணிகளில் இருந்த பல தொழிலாளர்கள் வெளியேறியதன் காரணமாக, குருகிராம் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது.

குப்பைகளை அகற்றும் பணி முடங்கியதால், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் என எங்கெங்கும் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வாழ்வதற்கே தகுதியற்ற நகரமாக குருகிராம் மாறி வருவதாக இணையவாசிகள் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், வங்கதேசத்தவர் இல்லை என ஆதாரங்களுடன் நிரூபித்தால், யாரையும் தாங்கள் எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை என்றும், உரிய ஆய்வு நடத்திய பிறகு, அவர்களைத் தொடர்ந்து இங்கேயே தங்க அனுமதிப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் குப்பைகள் மலைபோல் சேர்ந்து வரும் நிலையில், அவற்றை அகற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குருகிராம் வாசிகளின் கோரிக்கை.

Tags: வெளியேறிய தொழிலாளர்கள்குருகிராம்Workers leaving in droves: Is Gurugram becoming a garbage city?குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?
ShareTweetSendShare
Previous Post

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies