குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?
Jul 29, 2025, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Web Desk by Web Desk
Jul 28, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக அறியப்படும் குருகிராம் துர்நாற்றம் வீசும் குப்பை நகரமாகவே மாறிவிட்டது. வாழ்வாதாரத்திற்காக வந்த தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வரும் நிலையில், தன்னிலையை இழந்து தவிக்கிறது இந்நகரம்.

ஓங்கி உயர்ந்த கட்டடங்கள், வசதியான அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், நவீன போக்குவரத்து வசதிகள் என அடுத்த சிங்கப்பூராகவே பார்க்கப்பட்டதுதான் இந்தியாவின் Cyber Hub-ஆன குருகிராம்.

ஆனால் தற்போதோ அதன் நிலைமையே வேறு, எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற காமெடிக்கு பொருந்திப் போய்விட்டது , இந்த நகரம். மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், துர்நாற்றம் வீசும் சாலைகளாலும் நிரம்பியுள்ள குருகிராம் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக அங்குள்ள Ardee city கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியேற்ற தடுப்பு சட்டம் இங்கு மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.  குருகிராம் பகுதிகளில் சுகாதார பணிகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் பெங்காலி மொழி பேசுபவர்கள் தான்… வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களும் பெங்காலி மொழியையே பேசுவதால், வெளிநாட்டினர் எனக் கருதி போலீசார் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.

உரிய ஆவணங்கள் இருந்தாலும், போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து, குருகிராமிற்கு வாழ்வாதாரத்திற்காக வந்த தொழிலாளர்கள் பலர் குடும்ப குடும்பமாக சொந்த ஊருக்கே திரும்பி வருகின்றனர். சுகாதார பணிகளில் இருந்த பல தொழிலாளர்கள் வெளியேறியதன் காரணமாக, குருகிராம் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது.

குப்பைகளை அகற்றும் பணி முடங்கியதால், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் என எங்கெங்கும் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வாழ்வதற்கே தகுதியற்ற நகரமாக குருகிராம் மாறி வருவதாக இணையவாசிகள் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், வங்கதேசத்தவர் இல்லை என ஆதாரங்களுடன் நிரூபித்தால், யாரையும் தாங்கள் எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை என்றும், உரிய ஆய்வு நடத்திய பிறகு, அவர்களைத் தொடர்ந்து இங்கேயே தங்க அனுமதிப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் குப்பைகள் மலைபோல் சேர்ந்து வரும் நிலையில், அவற்றை அகற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குருகிராம் வாசிகளின் கோரிக்கை.

Tags: குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?வெளியேறிய தொழிலாளர்கள்குருகிராம்Workers leaving in droves: Is Gurugram becoming a garbage city?
ShareTweetSendShare
Previous Post

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

Next Post

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies