காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!
Sep 13, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசாவில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுவதால், உணவு, குடிநீருக்காக ஒவ்வொரு நொடியும் மக்கள் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐ.நா. விடுத்த எச்சரிக்கை, பிறநாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில்  1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.

ஹமாஸ் பயங்கரவாத குழுக்களை அழித்தொழிக்க, மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய படையெடுப்பு காசா முனையைச் சின்னபின்னமாக்கியுள்ளது.  உருக்குலைந்த கட்டடங்கள், தலைவிரித்தாடும் உணவுப் பஞ்சம்… பட்டினியால் பலியாகும் உயிர்கள்.. எனக் கற்பனைக்கு எட்டாத பாதிப்பு காசாவை முடக்கிப்போட்டுள்ளது.

தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், காசாவில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இஸ்ரேல் ஏவுகணை வீச்சு தற்போதும்கூட 53 பேர் உயிரைக் குடித்துள்ளது.

ஓயாத போரால் உயிரைப் பிடித்துக் கொண்டு முகாம்களில் தஞ்சமடைந்தோரின் நிலையோ இன்னும் பரிதாபம். தினம், தினம் பட்டினியால் வாடும் காசா மக்கள், வயிறு ஒட்டிய உடலுடன் உணவை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் நிலை தொடர்கிறது…. இந்தநிலையில், காசாவில் சர்வதேச ஊடகங்களுக்குச் செய்தி அனுப்பும் பத்திரிகையாளர் ஒருவர் பஞ்சத்தால் தனது கேமராக்களை விற்க முன்வந்துள்ளதும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

உணவுப் பஞ்சத்தால், காசாவில் மூன்றில் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்து வருவதால், 90 ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஐ.நா.விவரித்துள்ளது.

உலக நாடுகள் காசாவுக்கு அனுப்பும் உணவுப் பொருட்கள், நிவாரண உதவிகள் இஸ்ரேல் வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், அவை பாதிக்கப்பட்டோரைச் சென்று சேர்ந்ததாகத் தெரியவில்லை. காசாவுக்குள் உதவிப் பொருட்கள் செல்வதற்குத் தடையை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலை, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

காசாவில் மனிதாபிமான பேரழிவு நடந்து கொண்டிக்கும் நிலையில், உலக நாடுகளின் வலியுறுத்தலால், நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. அல்-மவாஷி, டெய்ர் அல்-பலாஹ், காசா சிட்டியில் காலை 10 மணி முதல்  இரவு 8 மணி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும், அதற்குள் உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: gazaகாசாபோர் நிறுத்தம்Severe food shortage in Gaza: 10-hour daily ceasefireகாசாவில் கடும் உணவுப் பஞ்சம்
Share
Tweet
SendShare
Previous Post

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

Next Post

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies