காடுகளின் காவலன் - சர்வதேச புலிகள் தினம்!
Jul 29, 2025, 11:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அனுசரிக்கப்படும் சர்வதேச புலிகள் தினம் இன்று. வனவளத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் புலிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உலகளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

புலிகளின் எண்ணிகையை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தடுக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் புலிகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டன.

இந்தியாவில் மொத்தமாக உள்ள 48 புலிகள் காப்பகங்களில் தமிழகத்தில் மட்டும் சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துரை, முதுமலை மற்றும் ஆனைமலை ஆகிய நான்கு இடங்களில் புலிகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

முதுமலை புலிகள் காப்பகத்தில் 162 புலிகளும், மற்ற மூன்று புலிகள் காப்பகத்தில் 192 புலிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர்த்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 250 புலிகள் நடமாடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

புலிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர், வாழ்விடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் முறையாக ஏற்படுத்தித் தருவதால் புலிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் கணிசமாக உயர்ந்து தெரிவிக்கும் வன ஆர்வலர்கள், புலிகள் காப்பகத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புலிகள் நுழைய முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. ஊருக்குள் வரும் புலிகள் கால்நடைகளோடு மனிதர்களைத் தாக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் பல்வேறு நெருக்கடியை எதிர்கொள்வதே இத்தகைய மோதலுக்கு முக்கிய காரணம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

புலிகளைப் பாதுகாப்பதன் மூலம் வனவளத்தைப் பெருக்க முடியும் என்பதோடு, பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் என்பதால்  அவற்றை பாதுக்காக்க வேண்டியதும், அது குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Tags: Guardian of the Forest - International Tiger Dayசர்வதேச புலிகள் தினம்today tiger news today
ShareTweetSendShare
Previous Post

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Next Post

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

Related News

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies