காடுகளின் காவலன் - சர்வதேச புலிகள் தினம்!
Sep 20, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அனுசரிக்கப்படும் சர்வதேச புலிகள் தினம் இன்று. வனவளத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் புலிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உலகளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

புலிகளின் எண்ணிகையை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தடுக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் புலிகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டன.

இந்தியாவில் மொத்தமாக உள்ள 48 புலிகள் காப்பகங்களில் தமிழகத்தில் மட்டும் சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துரை, முதுமலை மற்றும் ஆனைமலை ஆகிய நான்கு இடங்களில் புலிகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

முதுமலை புலிகள் காப்பகத்தில் 162 புலிகளும், மற்ற மூன்று புலிகள் காப்பகத்தில் 192 புலிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர்த்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 250 புலிகள் நடமாடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

புலிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர், வாழ்விடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் முறையாக ஏற்படுத்தித் தருவதால் புலிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் கணிசமாக உயர்ந்து தெரிவிக்கும் வன ஆர்வலர்கள், புலிகள் காப்பகத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புலிகள் நுழைய முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. ஊருக்குள் வரும் புலிகள் கால்நடைகளோடு மனிதர்களைத் தாக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் பல்வேறு நெருக்கடியை எதிர்கொள்வதே இத்தகைய மோதலுக்கு முக்கிய காரணம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

புலிகளைப் பாதுகாப்பதன் மூலம் வனவளத்தைப் பெருக்க முடியும் என்பதோடு, பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் என்பதால்  அவற்றை பாதுக்காக்க வேண்டியதும், அது குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Tags: Guardian of the Forest - International Tiger Dayசர்வதேச புலிகள் தினம்today tiger news today
Share
Tweet
SendShare
Previous Post

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Next Post

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies