காடுகளின் காவலன் - சர்வதேச புலிகள் தினம்!
Aug 6, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அனுசரிக்கப்படும் சர்வதேச புலிகள் தினம் இன்று. வனவளத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் புலிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உலகளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

புலிகளின் எண்ணிகையை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தடுக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் புலிகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டன.

இந்தியாவில் மொத்தமாக உள்ள 48 புலிகள் காப்பகங்களில் தமிழகத்தில் மட்டும் சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துரை, முதுமலை மற்றும் ஆனைமலை ஆகிய நான்கு இடங்களில் புலிகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

முதுமலை புலிகள் காப்பகத்தில் 162 புலிகளும், மற்ற மூன்று புலிகள் காப்பகத்தில் 192 புலிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர்த்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 250 புலிகள் நடமாடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

புலிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர், வாழ்விடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் முறையாக ஏற்படுத்தித் தருவதால் புலிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் கணிசமாக உயர்ந்து தெரிவிக்கும் வன ஆர்வலர்கள், புலிகள் காப்பகத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புலிகள் நுழைய முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. ஊருக்குள் வரும் புலிகள் கால்நடைகளோடு மனிதர்களைத் தாக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் பல்வேறு நெருக்கடியை எதிர்கொள்வதே இத்தகைய மோதலுக்கு முக்கிய காரணம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

புலிகளைப் பாதுகாப்பதன் மூலம் வனவளத்தைப் பெருக்க முடியும் என்பதோடு, பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் என்பதால்  அவற்றை பாதுக்காக்க வேண்டியதும், அது குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Tags: Guardian of the Forest - International Tiger Dayசர்வதேச புலிகள் தினம்today tiger news today
Share
Tweet
SendShare
Previous Post

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Next Post

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies