திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்
Sep 19, 2025, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Jul 29, 2025, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள்  பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு அரசுப்பள்ளி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கல்லூரி மாணவி என நான்கு பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

வயது வித்தியாசமின்றி மனநலம் குன்றிய சிறுமியைக் கூட பாலியல் ரீதியாக வேட்டையாடுமளவிற்கு தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்பதைத் தான் இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதுசரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் பள்ளிச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த குற்றவாளியின் சிசிடிவி அடையாளங்கள் தெரிந்தும் அவனைக் கைது செய்ய வாரக்கணக்கில் எடுத்துக் கொண்ட திமுகவின் ஏவல்துறையைக் கண்டால் குற்றவாளிகள் பயப்படுவார்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் என்பதை நாமும் பலமுறை எடுத்துக் கூறிவருகிறோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், போராட்டக்காரர்களை எப்படி அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு போடலாம் என்பதிலும் மற்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பேசி திசைத்திருப்புவதிலும் அக்கறையுடன் செயலாற்றும்  திமுக  அரசு, பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுகிறது.

ஆக, இனி இந்த உதவாத அரசையோ அல்லது கட்டப்பஞ்சாயத்து காவல்துறையையோ நம்பி பயனில்லை. நமது வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நாம் தான் பொறுப்பு. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும், தமிழகப் பெண்களின் கண்ணியம் காக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Women are afraid to go out under DMK rule: Nayinar NagendranDMKtn bjpNayanar Nagendran mlaபிஜெபிnews dmk
ShareTweetSendShare
Previous Post

கிங்டம் திரைப்படம் ரஜினியின் படங்கள் போல இருக்கும் : விஜய் தேவரகொண்டா

Next Post

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

Related News

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துரையினர் கண்ணீர் அஞ்சலி!

வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த மழை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்!

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

பிரிட்டன் அரச குடும்ப நெறிமுறைகளை மீறிய ட்ரம்ப் – வலுக்கும் கண்டனம்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு – செபி நிராகரிப்பு!

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

மத்திய அரசின் நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது – ராம.சீனிவாசன்

திருநின்றவூரில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளை சூழ்ந்த மழை நீர்!

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies