திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள்  பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு அரசுப்பள்ளி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கல்லூரி மாணவி என நான்கு பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

வயது வித்தியாசமின்றி மனநலம் குன்றிய சிறுமியைக் கூட பாலியல் ரீதியாக வேட்டையாடுமளவிற்கு தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்பதைத் தான் இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதுசரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் பள்ளிச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த குற்றவாளியின் சிசிடிவி அடையாளங்கள் தெரிந்தும் அவனைக் கைது செய்ய வாரக்கணக்கில் எடுத்துக் கொண்ட திமுகவின் ஏவல்துறையைக் கண்டால் குற்றவாளிகள் பயப்படுவார்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் என்பதை நாமும் பலமுறை எடுத்துக் கூறிவருகிறோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், போராட்டக்காரர்களை எப்படி அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு போடலாம் என்பதிலும் மற்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பேசி திசைத்திருப்புவதிலும் அக்கறையுடன் செயலாற்றும்  திமுக  அரசு, பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுகிறது.

ஆக, இனி இந்த உதவாத அரசையோ அல்லது கட்டப்பஞ்சாயத்து காவல்துறையையோ நம்பி பயனில்லை. நமது வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நாம் தான் பொறுப்பு. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும், தமிழகப் பெண்களின் கண்ணியம் காக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Women are afraid to go out under DMK rule: Nayinar NagendranDMKtn bjpNayanar Nagendran mlaபிஜெபிnews dmk
Share
Tweet
SendShare
Previous Post

கிங்டம் திரைப்படம் ரஜினியின் படங்கள் போல இருக்கும் : விஜய் தேவரகொண்டா

Next Post

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies