நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? - 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் - பகீர் தகவல்!
Jan 14, 2026, 02:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் நியூயார்க்கில் 44 மாடிகள் கொண்ட  அலுவலக கட்டடத்தில் நுழைந்து 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் ஷேன் தமுரா பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு பற்றி போலீசார் துப்பு துலக்கி வரும் நிலையில், ஷேன் தமுரா யார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

நீல நிற கோட் சூட்டில் ஹாலிவுட் வில்லன் போன்ற தோற்றம்…. கையில் அதிநவீன AR-15 assault rifle…. என நியூயார்க்கைத் தெறிக்கவிட்ட இவர் பெயர்தான் ஷேன் தமுரா. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பரபரப்பான மிட் டவுன் மன்ஹட்டான் பகுதியில் உள்ள 345 பாரக் அவென்யூவில்தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது.  அயர்லாந்து தூதரகம், நேஷனல் ஃபுட்பால் லீக் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இயங்கும் 44 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் அதிரடியாக நுழைந்தார் ஷேன் தமுரா.

முதல் தளத்தில் வில்லன் போன்று நுழைந்த  ஷேன் தமுரா, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைய, போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் ரத்தவெள்ளத்தில் பிணமாயினர். முதல் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததை  உணர்ந்த சில பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தின் கதவுகளை மூடி, ஷோபாக்களையும், பர்னிச்சர்களையும் கொண்டு தற்காப்பு சுவரை அமைத்துப் பதுங்கிக் கொண்டனர்.

இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுத்தீயாய் பரவ, நியூயார்க் நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. துப்பாக்கிகளுடன் நுழைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒவ்வொரு தளமாகச் சல்லடை போட்டுத் தேடிய போலீசார், 33வது தளத்தில் ஷேன் தமுராவை சடலமாக மீட்டனர். அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசாரின் ரிப்போர்ட்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்துத் துப்பு துலக்கிய காவல்துறைக்குப் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. 27 வயதுடைய ஷேன் தமுரா, ஹவாய் பகுதியில் பிறந்து வேகாஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தவர் என்பது தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் துப்பறிவாளனாக பணியாற்றிய ஷேன் தமுரா, ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்ல அனுமதி பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தாக்குதல் நடந்த அன்று குண்டு துளைக்காத ஆடையை ஷேன் தமுரா அணிந்திருந்தாக கூறிய போலீசார், அவர் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். ஷேன் தமுரா வை “Pure evil”என்ற வார்த்தையால் சாடியுள்ள காவல்துறை, நியூயார்க்கின் இதய பகுதியில் நுழைந்து, அப்பாவி மக்களையும்,  காப்பாற்றத் துடித்த போலீஸையும் சுட்டுக்கொன்றதாகக் கூறியுள்ளது.

Tags: Who is Shane Tamurathe man who terrorized New York? - The brutal man who shot and killed 5 people - Breaking newsஅமெரிக்காவின் நியூயார்க்
ShareTweetSendShare
Previous Post

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

Next Post

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Related News

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies