சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!
Sep 18, 2025, 11:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிவ பக்தராகவே மாறிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவ பக்தியில் மூழ்கிய அவர் புதுச்சேரியில் சிவன் கோயிலைக் கட்டவும் திட்டமிட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த 41 வயதான ஹோஷி தகாயுகி, டோக்கியோவில் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை நிலையங்களை நடத்தி வந்தவர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த அவர், பனை ஓலைச் சுவடி நாடி ஜோதிட அமர்வில் கலந்து கொண்டார். அவரது பெயருக்கு வந்த ஓலைச்சுவடியில், கடந்த காலத்தில் இமயமலையில் வாழ்ந்ததாகவும், நிகழ்காலத்தில் இந்து ஆன்மிக வழியில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதை எண்ணியபடியே ஜப்பானுக்குத் திரும்பிய ஹோஷி தகாயுதிக்கு விசித்திரமான கனவு வந்திருக்கிறது. கடந்த காலத்தில் உத்தரகண்ட்டில் இருப்பது போலக் காட்சி தென்பட, அந்தக் கனவு தனது  வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகக் கூறியிருக்கிறார் ஹோஷி தகாயுகி.

தனது தொழிலை நிர்வாகிகளிடம் ஒப்படைத்த அவர், முழுநேர சிவ பக்தராக காவி உடைக்கு மாறினார். டோக்கியோவில் சிவனுக்காகக் கோயில் ஒன்றைக் கட்டி பூஜைகளையும் செய்து வருகிறார். பால கும்ப குருமுனி என்ற பெயரால் அறியப்படும் அவர், 20 சீடர்களுடன் இந்தியா வந்து, கன்வர் யாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டார். அத்துடன் கன்வர் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்காக, டேராடூனில் 2 நாள் உணவு முகாமையும் நடத்தி வருகிறார்.

புதுச்சேரியில் 35 ஏக்கர் நிலத்தில் பெரிய சிவன் கோயிலை கட்டவுள்ளதாகவும், உத்தரகாண்டில் ஆசிரமத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஜப்பானியத் தொழிலதிபர் ஒருவர், தமிழகத்தில் மனமாற்றம் அடைந்து,  சிவபக்தராக வலம் வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Tags: கோயில்Japanese businessman who became a Shiva devotee: Plans to build an ashram and temple in Uttarakhandசிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர்உத்தரகாண்டில் ஆசிரமம்
ShareTweetSendShare
Previous Post

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

Next Post

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies