நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலா வந்த கரடியால் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் உணவு தேடிச் சுற்றித் திரிந்த கரடியை தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.