ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!
Jul 31, 2025, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 09:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச அளவில் ஒரே நாளில் 1700 மனிதர்களையும், விலங்குகளையும் காவு வாங்கிய நியோஸ் ஏரி ஆப்பிரிக்காவின் கொலையாளி என்றே  அழைக்கப்படுகிறது. அமைதியான ஏரி, பூகம்பமாக மாறி பல உயிர்களை பலி வாங்கிய எப்படி? காரணம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

1986ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த அந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மத்திய ஆப்பிரிக்கா நாடான கேமரூனின் வடமேற்கு பகுதியில் உள்ளது மிகவும் அபாயகரமான நியோஸ் ஏரி… 1986ம் ஆண்டு திடீரென  கொடிய நச்சு வாயுவை இந்த ஏரி கொப்பளிக்க, 100 மீட்டர் உயரத்திற்கு மேகங்கள் படர்ந்தன.

இதன் காரணமாக ஆக்ஸிஜன் அளவு குறைந்து, ச்சா, நயோஸ், சுபும் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1700-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான விலங்குகளும் செத்து மடிந்தன. பூச்சிகள் கூட தப்ப முடியவில்லை.

முதலில் இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், உடற்கூராய்வும், ஏரி நீரின் பரிசோதனையும் உண்மையை வெட்டவெளிச்சமாக்கியது. ஏரியில் இருந்து அதிகளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறியதும், காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் குறைந்ததுமே உயிரிழப்புக்குக் காரணம் என்ற விஷயம் விஞ்ஞானிகளுக்குப் புலப்பட்டது.

நியோஸ் ஏரி ஒரு எரிமலை ஏரி என்பதால், அந்த நிலப்பரப்பின் ஆழமான பகுதிகளில் இருந்து மாக்மா எனும் எரிமலை குழம்பில் இருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு, 682 மீட்டர் ஆழம் கொண்ட ஏரியின் அடிப்பகுதியில் சேர்ந்துவிடுகிறது. நிலச்சரிவு ஏற்படும் சமயங்களில் ஏற்படும் அழுத்தத்தால், அவை பூகம்பம் போல் பீறிட்டு எழுந்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

நியாஸ் ஏரிக்கு முன்னால் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கேமரூனில் உள்ள மனூன் ஏரியில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறி 100 கிலோமீட்டருக்கு மேல் பரவியதில் 37 பேர் உயிரிழந்தனர். எதிர்கால பேரழிவு நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், நியோஸ் ஏரி மிகத் தீவிரமான கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏரியை சுற்றி சென்சார்களும், சைரன்களும் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை நச்சு வாயுக்கள் வெளியேறினால் அவை பொதுமக்களை எச்சரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியோஸ் ஏரி போன்றே காங்கோவில் உள்ள கிவு ஏரியும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Africa's killer! The dangerous lake that killed 1700 people!1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரிநியோஸ் ஏரிநியோஸ் ஏரி ஆப்பிரிக்காவின் கொலையாளி
ShareTweetSendShare
Previous Post

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

Next Post

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

Related News

அமெரிக்கா : மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு கோலாகலம்!

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் 11 பேர் உயிரிழப்பு – அயல்நாடு வேலையை துறந்து உணவகம் நடத்தும் இளைஞர்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விமானி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி : நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து – போலீசார் விசாரணை!

முதலமைச்சர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

கன்னியாகுமரி : வணிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வாக்குவாதம்!

5 ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் : கங்குலி

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஸ்மிருதி மந்தனா!

ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!

இஎஸ்ஐ புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் : கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன்

தேனி : உச்சத்தை தொட்ட மின் உற்பத்தி – தற்காலிமாக நிறுத்தப்பட்ட காற்றாலைகள்!

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

ஆண்டிபட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு – ஆசிரியர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies