ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!
Jan 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 09:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச அளவில் ஒரே நாளில் 1700 மனிதர்களையும், விலங்குகளையும் காவு வாங்கிய நியோஸ் ஏரி ஆப்பிரிக்காவின் கொலையாளி என்றே  அழைக்கப்படுகிறது. அமைதியான ஏரி, பூகம்பமாக மாறி பல உயிர்களை பலி வாங்கிய எப்படி? காரணம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

1986ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த அந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மத்திய ஆப்பிரிக்கா நாடான கேமரூனின் வடமேற்கு பகுதியில் உள்ளது மிகவும் அபாயகரமான நியோஸ் ஏரி… 1986ம் ஆண்டு திடீரென  கொடிய நச்சு வாயுவை இந்த ஏரி கொப்பளிக்க, 100 மீட்டர் உயரத்திற்கு மேகங்கள் படர்ந்தன.

இதன் காரணமாக ஆக்ஸிஜன் அளவு குறைந்து, ச்சா, நயோஸ், சுபும் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1700-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான விலங்குகளும் செத்து மடிந்தன. பூச்சிகள் கூட தப்ப முடியவில்லை.

முதலில் இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், உடற்கூராய்வும், ஏரி நீரின் பரிசோதனையும் உண்மையை வெட்டவெளிச்சமாக்கியது. ஏரியில் இருந்து அதிகளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறியதும், காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் குறைந்ததுமே உயிரிழப்புக்குக் காரணம் என்ற விஷயம் விஞ்ஞானிகளுக்குப் புலப்பட்டது.

நியோஸ் ஏரி ஒரு எரிமலை ஏரி என்பதால், அந்த நிலப்பரப்பின் ஆழமான பகுதிகளில் இருந்து மாக்மா எனும் எரிமலை குழம்பில் இருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு, 682 மீட்டர் ஆழம் கொண்ட ஏரியின் அடிப்பகுதியில் சேர்ந்துவிடுகிறது. நிலச்சரிவு ஏற்படும் சமயங்களில் ஏற்படும் அழுத்தத்தால், அவை பூகம்பம் போல் பீறிட்டு எழுந்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

நியாஸ் ஏரிக்கு முன்னால் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கேமரூனில் உள்ள மனூன் ஏரியில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறி 100 கிலோமீட்டருக்கு மேல் பரவியதில் 37 பேர் உயிரிழந்தனர். எதிர்கால பேரழிவு நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், நியோஸ் ஏரி மிகத் தீவிரமான கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏரியை சுற்றி சென்சார்களும், சைரன்களும் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை நச்சு வாயுக்கள் வெளியேறினால் அவை பொதுமக்களை எச்சரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியோஸ் ஏரி போன்றே காங்கோவில் உள்ள கிவு ஏரியும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Africa's killer! The dangerous lake that killed 1700 people!1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரிநியோஸ் ஏரிநியோஸ் ஏரி ஆப்பிரிக்காவின் கொலையாளி
ShareTweetSendShare
Previous Post

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

Next Post

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies