தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?
Jun 13, 2026, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 09:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தைத் தர மறுத்த அமெரிக்கா, இப்போது இஸ்ரோவுடன்  இணைந்து நிசார் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது.  இது இஸ்ரோவின்  தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் புவிசார் அரசியல் வெற்றியாகவும் கருதப்படுகிறது. இஸ்ரோவின் இந்த வெற்றியின் பின்னணி பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

1979ஆம் ஆண்டு முதல், கடந்த 46 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை இஸ்ரோ  விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த ஜனவரி  29ம் தேதி ஏவப்பட்ட  ஜிஎஸ்எல்வி எப் -15 ராக்கெட்  இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஆகும்.

இந்திய- அமெரிக்கக் கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து உள்நாட்டு கிரையோஜெனிக் இயந்திரத்தால் இயக்கப்படும் இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

2392 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் உலகின் மிக விலை உயர்ந்த செயற்கைக் கோளாகும். சுமார் 11,284 கோடி செலவில் இந்த செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இது இஸ்ரோவின் ஓராண்டுக்கான மொத்த செலவுக்கு இணையானதாகும்.

இந்தச் செயற்கைக் கோளின் எடை அதிகம் என்பதால்,   ஜிஎஸ்எல்வி எப் -16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 30 ஆண்டுக்ளுக்கும் மேலாக கிரையோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தை இந்தியா பெறுவதை  அமெரிக்கா தீவிரமாகத் தடுத்தது. விண்வெளித் துறையில் இந்தியா முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் பல தடைகள் விதிக்கப்பட்டன. நாட்டின் மீது இராஜதந்திர அழுத்தங்கள் கொடுக்கப் பட்டன. இதற்காக இந்தியா மேற்கொண்ட சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தும் அமெரிக்காவால்  சீர்குலைக்கப்பட்டன.

1990களில் விண்வெளித் துறையில் இந்தியா சீராக முன்னேறிக் கொண்டிருந்தது. இஸ்ரோ துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனமான PSLV ஐ உருவாக்கியது. இதன் மூலம் 1,750 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். PSLV  800 கிலோமீட்டர் உயரத்தில் குறைந்த பூமி சுற்றுப்பாதையில்  கொண்டு செல்லக்கூடிய நம்பகமான ராக்கெட் ஆகும்.

PSLV யால் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புவிசார் சுற்றுப்பாதையில்  கனமான பேலோடுகளை எடுத்து செல்ல முடியவில்லை. 2,500 கிலோ  அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த  இந்தியாவுக்கு அதிக சக்திவாய்ந்த ராக்கெட் மற்றும்,அதற்கான  மேம்பட்ட இன்ஜின் தேவைப்பட்டது.அதுதான் கிரையோஜெனிக் எஞ்சின்.

கிரையோஜெனிக்  தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே அப்போது வைத்திருந்தன. வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பத்தை  வாங்குவது அல்லது உள்நாட்டிலேயே அந்த தொழில் நுட்பத்தை உருவாக்குவது  என  இரண்டே வழிகள்தாம் இந்தியாவுக்கு இருந்தன.

முதலில் ஜப்பான் முன்வந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. பிறகு அமெரிக்காவின் General Dynamics நிறுவனமும், ஐரோப்பாவின்  Arianespace நிறுவனமும் கிரையோஜெனிக்  தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்தன. அதிகமான விலை மற்றும் எந்தவொரு தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் நிராகரிக்கும்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நீண்டகால சுயச்சார்புக்குத் தொழில்நுட்ப பரிமாற்றம் இன்றியமையாதது என்பதால் இதுவும் பேச்சுவார்த்தைகளோடு முடிந்து போனது.

1991-ல் ரஷ்யாவின் Glavkosmos, கிளாவ்கோஸ்மோஸுடன் இரண்டு கிரையோஜெனிக் என்ஜின்களை முழு தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் 200 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான வரலாற்று ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

பனிப்போர் முடிவடைந்த நிலையில், பொருளாதார ஆதரவுக்காக  மேற்குலகை நோக்கி ரஷ்யா திரும்பியது.  அமெரிக்கா ராஜதந்திர அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியது. 1992 ஆம் ஆண்டில், இஸ்ரோ மற்றும் (Glavkosmos), கிளாவ்கோஸ்மோஸ் மீது அமெரிக்கா தடைகளை விதித்தது.அதன் விளைவாக கிளாவ்கோஸ்மோஸுடன்  ஏற்படுத்திய  ஒப்பந்தம் முடங்கியது.

ஆனாலும், எந்த வரைபடங்களும், பயிற்சி அல்லது தொழில்நுட்ப பரிமாற்றமும் இல்லாமல் ரஷ்யா ஏழு கிரையோஜெனிக் இன்ஜின்களை வழங்க அனுமதிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின்கள், இந்தியாவின் GSLV திட்டத்தின் ஆரம்பகால ராக்கெட்டுகளை அனுப்பப் பயன்படுத்தப் பட்டன.  அப்போதைய பிரதமர் PV நரசிம்ம ராவ் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை நம்பியிருப்பதன்  பாதிப்பை உணர்ந்தார்.  1994ஆம் ஆண்டு ஏப்ரலில்   300 கோடி ஆரம்ப நிதியில் உள்நாட்டு கிரையோஜெனிக்  மேம்பாட்டுத் திட்டத்தை  மத்திய அரசு தொடங்கியது.

கிளாவ்கோஸ்மோஸில் உள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு  ஒத்துழைப்பு அளித்தனர். உணர்திறன் கூறுகள் மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகள் இந்தியாவிற்கு ரகசியமாக அனுப்பப்பட்டன.   இந்நிலையில், 1994 ஆம் ஆண்டில், இஸ்ரோவின் கிரையோஜெனிக் திட்டத்துக்குத்  தலைமை தாங்கிய நம்பி நாராயணன் மற்றும் விஞ்ஞானி சசி குமரனும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் திடீரென கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கிரையோஜெனிக் திட்டம் நின்றுபோனது.  சிபிஐ விசாரணையில்  நம்பி நாராயணன்  மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது என நிரூபிக்கப்பட்டது.

தொடர்ந்து 2014-ல் இஸ்ரோ 100 சதவீதம்  உள்நாட்டிலேயே தயாரித்த  கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தி GSLV-D5 ராக்கெட்டை  வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்தது. கடந்த 11 ஆண்டுகளாக, இந்தியா கனரக செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த GSLV- யை வழக்கமாகப் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல  நாடுகளுக்கும் நம்பகமான ஏவுதள சேவையையும் வழங்கி வருகிறது.

ஒரு காலத்தில் உலகம் பகிர்ந்து கொள்ள மறுத்த அதே கிரையோஜெனிக் தொழில்நுட்பம் இந்தியாவின் கையில். இதுதான் சுயசார்பு பாரதம். இது தான் தன்னபிக்கை இந்தியாவின் அடையாளம். அமெரிக்கச் செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல இந்தியாவின்  GSLV பயன்படுகிறது. இது  இஸ்ரோவின்  மிகப்பெரிய சாதனையாகும்.

Tags: கிரையோஜெனிக் இன்ஜின்இந்தியாவின் புவிசார் அரசியல் வெற்றிஜிஎஸ்எல்வி எப் -15 ராக்கெட்ஜிஎஸ்எல்வி எப் -16 ராக்கெட்isro news todayISROஇஸ்ரோNASAஅமெரிக்காAmerica refused technology: How did ISRO become a customer?
ShareTweetSendShare
Previous Post

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

Next Post

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies