கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சேற்று தண்ணீரில் குளித்து மகிழும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானையின் வீடியோ வைரலாகி உள்ளது.
பரம்பிக்குளம் வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில், ஒற்றைக் கொம்பன் என்கின்ற காட்டு யானை, சேற்று நீரில் குளித்து மகிழ்ந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.