"Dog Babu" வரிசையில் "Dogesh Babu" - தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!
Nov 5, 2025, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

Web Desk by Web Desk
Aug 2, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் வளர்ப்பு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அந்த பாணியில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.  என்ன நடந்தது? பின்னணி என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.. விரிவாக..

சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பீகாரில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டது. ஆதார், ரேசன் கார்டு போன்றவை வாக்காளர் அடையாள அட்டை பெறத் தகுதியான ஆவணம் அல்ல என்று  கூறியிருந்த தேர்தல் ஆணையம், இருப்பிடச் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்ட 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்றது.

வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை காட்டிய நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அருகேயுள்ள மசௌரி பகுதியில்  RTPS போர்ட்டலில்  Dog Babu என்ற பெயரில் கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்றுக்கு அதிகாரிகள் இருப்பிடச் சான்று வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நாயின் போட்டோவுடன் கூடிய சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தையும் கிளப்பியது.

உடனடியாக அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்தபோதும், 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வாக்குரிமையை உறுதி செய்வதில் பீகார் அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான சாடின.

இந்த நிலையில் நவாடா மாவட்டத்தில் அதே பாணியில் நாய் ஒன்றுக்கு இருப்பிட சான்று கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் வந்திருப்பது அதிகாரிகளை விழிபிதுங்க வைத்துள்ளது. Dogesh Babu என்ற பெயரில் பெறப்பட்ட விண்ணப்பத்தில், தந்தை பெயர் டாகேஷ் பாபா, தாய் பெயர் டாகேஷ் மாமி, 11வது வார்டு, கரோந்த் கிராமம், நவாடா மாவட்டம் போன்ற விவரங்களை குறிப்பிட்ட நாயின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே Dog babu விவகாரம் பீகாரில் புயலைக் கிளப்பிய நிலையில், அதே பாணியில் விண்ணப்பித்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. RTPS சேவை மையத்தைத் தவறாகப் பயன்படுத்திய நபர் குறித்து முழுமையான விசாரணை நடத்திய கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags: election commission of indiaபீகார்"Dogesh Babu" in the "Dog Babu" line - the controversy continuesBihar is waking up
ShareTweetSendShare
Previous Post

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

Next Post

முதல்வர் பெயர் தொடர்பான வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

Related News

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies