"Dog Babu" வரிசையில் "Dogesh Babu" - தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!
Jul 31, 2025, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் வளர்ப்பு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அந்த பாணியில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.  என்ன நடந்தது? பின்னணி என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.. விரிவாக..

சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பீகாரில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டது. ஆதார், ரேசன் கார்டு போன்றவை வாக்காளர் அடையாள அட்டை பெறத் தகுதியான ஆவணம் அல்ல என்று  கூறியிருந்த தேர்தல் ஆணையம், இருப்பிடச் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்ட 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்றது.

வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை காட்டிய நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அருகேயுள்ள மசௌரி பகுதியில்  RTPS போர்ட்டலில்  Dog Babu என்ற பெயரில் கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்றுக்கு அதிகாரிகள் இருப்பிடச் சான்று வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நாயின் போட்டோவுடன் கூடிய சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தையும் கிளப்பியது.

உடனடியாக அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்தபோதும், 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வாக்குரிமையை உறுதி செய்வதில் பீகார் அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான சாடின.

இந்த நிலையில் நவாடா மாவட்டத்தில் அதே பாணியில் நாய் ஒன்றுக்கு இருப்பிட சான்று கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் வந்திருப்பது அதிகாரிகளை விழிபிதுங்க வைத்துள்ளது. Dogesh Babu என்ற பெயரில் பெறப்பட்ட விண்ணப்பத்தில், தந்தை பெயர் டாகேஷ் பாபா, தாய் பெயர் டாகேஷ் மாமி, 11வது வார்டு, கரோந்த் கிராமம், நவாடா மாவட்டம் போன்ற விவரங்களை குறிப்பிட்ட நாயின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே Dog babu விவகாரம் பீகாரில் புயலைக் கிளப்பிய நிலையில், அதே பாணியில் விண்ணப்பித்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. RTPS சேவை மையத்தைத் தவறாகப் பயன்படுத்திய நபர் குறித்து முழுமையான விசாரணை நடத்திய கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags: election commission of indiaபீகார்"Dogesh Babu" in the "Dog Babu" line - the controversy continuesBihar is waking up
ShareTweetSendShare
Previous Post

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

Next Post

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

Related News

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு!

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

அமலாக்கத்துறை சம்மன் – நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் 11 பேர் உயிரிழப்பு – அயல்நாடு வேலையை துறந்து உணவகம் நடத்தும் இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் அமைச்சா்களுக்கு தடை – நெதர்லாந்து

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு

உக்ரைன் சிறைச்சாலை மீது தாக்குதல் – பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு!

சிவகங்கை : குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்குக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

காஞ்சிபுரம் : மழை நீர் வடி கால்வாயில் பக்கச்சுவர் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

உடுமலைப்பேட்டை  அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணை கைதி ஒருவர் பலி!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை : ஊசி போடும் பயிற்சி செவிலியர்!

இங்கிலாந்து : களைகட்டிய பட்டம் விடும் திருவிழா!

குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை : உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies