ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் - மிரட்டிய சுனாமி - மிரட்சியில் மக்கள்!
Jul 31, 2025, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சுனாமியின் தாக்கம் காரணமாக ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில்  கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குலுங்கிய கட்டடங்கள்… சரிந்து விழுந்த பொருட்கள்….  உறைந்து போன மக்கள் என ரஷ்யாவை உலுக்கியெடுத்துள்ளது சக்தி வாய்ந்த  நிலநடுக்கம்.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான பூகம்பத்தால் கட்டடங்கள்  திடீரென குலுங்க, அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். சில கட்டடங்கள் இடிந்து விழுந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

ஒரு பக்கம் நிலநடுக்கம் என்றால்,  பூகம்பத்தின் தாக்கத்தால்,  4 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலைகள் கடலோர பகுதிகளை சீற்றத்துடன் விழுங்கியது.  உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் கிண்டர் கார்டன் ஒன்று உருக்குலைந்த நிலையில், அங்கிருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுனாமி பேரலையின் தாக்கத்தால், ரஷ்யாவின் ஆன்டிஃபெரோவ் தீவுப்பகுதிகளில் ஏராளமான கடற்சிங்கங்கள் கரைகளை நோக்கி இழுத்து வரப்பட்டன. நிலநடுக்கத்தின் வீரியத்தால் எழுந்த சுனாமி பேரலை, ரஷ்யாவைத் தொடர்ந்து ஜப்பானின் ஹோக்கெய்டோ நகரில் 8 இடங்களைத் தாக்கியது.  மீண்டும் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், ஜப்பானில் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்ஸ், சிலி  உள்ளிட்ட பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 40  நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை. விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டது.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1952-ம் ஆண்டு இதேபகுதியில் ரிக்டர் 9 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால், அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் 9.1 மீட்டர் அளவுக்குச் சுனாமி பேரலைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: earthquakes in RussiaTerrible earthquake in Russia - people in fear of a threatened tsunamiமிரட்டிய சுனாமிரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்earthquake news today
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

Next Post

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

Related News

இஸ்ரேல் அமைச்சா்களுக்கு தடை – நெதர்லாந்து

உக்ரைன் சிறைச்சாலை மீது தாக்குதல் – பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு!

இங்கிலாந்து : களைகட்டிய பட்டம் விடும் திருவிழா!

அமெரிக்கா : மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு கோலாகலம்!

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு

சிவகங்கை : குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்குக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

காஞ்சிபுரம் : மழை நீர் வடி கால்வாயில் பக்கச்சுவர் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

உடுமலைப்பேட்டை  அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணை கைதி ஒருவர் பலி!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை : ஊசி போடும் பயிற்சி செவிலியர்!

குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை : உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல்!

சென்னை மாநகராட்சியில் பெயரளவில் மட்டுமே கோரப்படும் டெண்டர்!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு!

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies