ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் - மிரட்டிய சுனாமி - மிரட்சியில் மக்கள்!
Jan 14, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சுனாமியின் தாக்கம் காரணமாக ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில்  கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குலுங்கிய கட்டடங்கள்… சரிந்து விழுந்த பொருட்கள்….  உறைந்து போன மக்கள் என ரஷ்யாவை உலுக்கியெடுத்துள்ளது சக்தி வாய்ந்த  நிலநடுக்கம்.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான பூகம்பத்தால் கட்டடங்கள்  திடீரென குலுங்க, அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். சில கட்டடங்கள் இடிந்து விழுந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

ஒரு பக்கம் நிலநடுக்கம் என்றால்,  பூகம்பத்தின் தாக்கத்தால்,  4 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலைகள் கடலோர பகுதிகளை சீற்றத்துடன் விழுங்கியது.  உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் கிண்டர் கார்டன் ஒன்று உருக்குலைந்த நிலையில், அங்கிருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுனாமி பேரலையின் தாக்கத்தால், ரஷ்யாவின் ஆன்டிஃபெரோவ் தீவுப்பகுதிகளில் ஏராளமான கடற்சிங்கங்கள் கரைகளை நோக்கி இழுத்து வரப்பட்டன. நிலநடுக்கத்தின் வீரியத்தால் எழுந்த சுனாமி பேரலை, ரஷ்யாவைத் தொடர்ந்து ஜப்பானின் ஹோக்கெய்டோ நகரில் 8 இடங்களைத் தாக்கியது.  மீண்டும் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், ஜப்பானில் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்ஸ், சிலி  உள்ளிட்ட பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 40  நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை. விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டது.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1952-ம் ஆண்டு இதேபகுதியில் ரிக்டர் 9 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால், அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் 9.1 மீட்டர் அளவுக்குச் சுனாமி பேரலைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: earthquakes in RussiaTerrible earthquake in Russia - people in fear of a threatened tsunamiமிரட்டிய சுனாமிரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்earthquake news today
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

Next Post

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies