தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?
Aug 9, 2026, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய 3 தீவிரவாதிகளின் உயிரைக் குடித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள்  அமெரிக்காவின் M4 carbine rifle போன்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தியபோதும், தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டியுள்ளது இந்திய ராணுவம்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் “ஆப்ரேஷன் மகாதேவ்” பெயரில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது ராணுவம்.

லஷ்கா்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ரகசிய செய்திகளை அனுப்பப் பயன்படுத்தும் தகவல்தொடர்பு சாதனத்தின் தொழில்நுட்ப சமிக்ஞை, ஹாா்வான் வனப்பகுதியிலிருந்து கிடைக்க, புலி போன்று பதுங்கி பாய்ந்தது ராணுவம்….  24 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் 4 பாரா படையினரைக் கொண்ட குழு பயங்கரவாதிகளை வேட்டையாடியது.

ராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பஹல்காம்  தாக்குதலை அரங்கேற்றியவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட சுலைமான அலியாஸ் ஃபைசல் லஷ்கர் – இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் A-Category கமாண்டராக செயல்பட்டார் என்பதும், பாகிஸ்தான் ராணுவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற SSG படைப்பிரிவில் கமாண்டாவோ பணியாற்றினார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதேபோன்று லஷ்கர்-இ-தொய்பாவின் A-Category தீவிரவாதி ஆஃப்கன், A-grade தீவிரவாதி ஜிப்ரான்  ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட  தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன அமெரிக்காவின் M4 கார்பைன் ரைபிள், இரண்டு ஏகே.47 துப்பாக்கிகள், 17 கையேறி குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  ஜம்மு காஷ்மீரில் அத்துமீறும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், அண்மைக்காலமாக அவர்களிடம் மேற்கத்திய ஆயுதங்கள் கிடைத்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2021ம்  ஆண்டு ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியபோது, அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் தாலிபான்களின் கைகளில் சிக்கின. அந்த ஆயுதங்கள் சட்டவிரோத சந்தைகள் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததும், பின்னர் அவை இந்திய எல்லையில் தீவிரவாதிகளுக்குக் கைமாறியதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் M4 Carbine ரைபிள்கள் இலகுவானது என்பதால், காஷ்மீர் போன்ற செங்குத்தான மலைப்பகுதிகள், கரடுமுரடான காட்டுப்பாதைகளில் எடுத்துச் செல்வது எளிதானது, எடைகுறைவானது. இதன் மூலம்  கூடுதல் ஆயுதங்களையும் கொண்டுசெல்ல முடியும் என்பதால் தீவிரவாதிகள் இவ்வகை ரைபிள்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் M4 Carbine-னில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதால்,  எந்த சூழ்நிலையிலும் எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கலாம்.

தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்கள், இந்தியாவின் போர் உத்தியை மறுசீரமைப்பதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் எல்லைகளில் வேலி அமைத்தல், பயங்கரவாதத்திற்கு நிதி மற்றும் ஆயுதக்கடத்தலுக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பு போன்றவற்றையும் வலியுறுத்துகிறது.

Tags: How did the terrorists get the M4 carbine rifle?M4 carbine rifleindia vs pakistanஇந்திய ராணுவம்தீவிரவாதிகள்ஆப்ரேஷன் மகாதேவ்
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

Next Post

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

Related News

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies