திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னார் பகுதியில் அமைந்துள்ள கேரள சோதனைச் சாவடியில் அதிகாரிகள் சோதனை பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது மேல் குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவ்வழியாக சென்றுகொண்டு இருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சிறுத்தை பல் இருந்ததாகக் கைது செய்த கேரள அதிகாரிகள் தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மாரிமுத்துவை கைது செய்த தமிழக வனத்துறை உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கழிவறைக்குச் சென்ற மாரிமுத்து அங்கே தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த போலீசார் மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.