காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Mar 16, 2026, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து செங்காடு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மனைவி ராஜம் என்பதும், அதே  பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் – சரிதா தம்பதியர், 14 வயது இளஞ்சிறாருடன் சேர்ந்து ராஜத்தை கொலை செய்ததும் காவல்துறைக்குத் தெரியவந்தது.

அவர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜம் அணிந்திருந்த 5 சவரன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில், முதல் குற்றவாளியான சரிதாவிற்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2-வது குற்றவாளியான பாஸ்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 3-வது குற்றவாளியான 14 வயது இளஞ்சிறார் குறித்த நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: காஞ்சிபுரம்Kanchipuram: Court gives dramatic verdict in woman's burning to death caseநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

Next Post

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் : காஸ்பர் ரூட், ஸ்வெரேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies