உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இடைத்தரகர்கள் பணம் பெற்றுக் கொண்டு படிவத்தைப் பூர்த்தி செய்து தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த தேவதானப்பட்டி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் படிவங்களைப் பூர்த்தி செய்யப் பேரூராட்சி நிர்வாகம் போதிய ஆட்களை நியமிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் பணம் பெற்று படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்ததால் மக்கள் அதிருப்திக்குள்ளானர்.