தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!
Sep 18, 2025, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Web Desk by Web Desk
Aug 2, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழிலாளர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும் இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் இணைக்கும் வகையில் SPREE எனும் திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் SPREE திட்டம் என்றால் என்ன? அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

பத்து அல்லது பத்திற்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு தொழில் செய்யும் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கும் வகையில் SPREE என்ற புதிய திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களை எந்தவித கட்டணமுமின்றி SPREE திட்டத்தின் மூலம் இ.எஸ்.ஐ- இல் இணைந்து தொழிலாளர் நலன் சார்ந்த பாதுகாப்பை பெறமுடியும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இ எஸ் ஐ மருத்துவமனை மட்டுமல்லாது அவற்றோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள மருத்துவமனைகளிலும் அனைத்துவிதமான சிகிச்சைகளையும் தொழிலாளர் பெற ஏதுவாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக இதற்கான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அந்தந்த மண்டல அலுவலகங்களில் இதற்கான உதவி மையங்களும் திறக்கப்பட உள்ளன.  தொழிலாளர்கள் அதிகளவில் இருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் ஏற்கனவே சுமார் 50 லட்சம் பேர் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைந்து பயன்பெற்று வரும் நிலையில், மேலும் பல தொழிலாளர்களை இணைக்கும் மத்திய அரசின் முயற்சிக்குத் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது

இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைந்த தொழிலாளி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் பட்சத்தில் அவரை சார்ந்துள்ள குடும்பத்தினர் தங்களின் வாழ்நாள் முழுவதும் எவ்வித சிரமமுமின்றி வாழ உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. பெற்றோர்களை இழந்த வாரிசுகளுக்கு மட்டுமல்ல, வாரிசுகளை இழந்த பெற்றோர்களுக்கும் உதவித் தொகை கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உச்ச வரம்பில்லாத சிகிச்சைக்கான செலவு, தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறும் வசதி என மருத்துவம் சார்ந்த செலவினங்களிலிருந்து தொழிலாளர்களை மீட்கும் வரப்பிரதாசமாக இந்த SPREE திட்டம் அமைந்திருக்கிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் தொழிலாளர்கள் அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: மத்திய அரசின் அசத்தல் திட்டம்Coimbatore: Aadi festival at Karumariamman Templeஆடி திருவிழா கோலாகலம்Concern for workers' welfare: Central government's amazing scheme
ShareTweetSendShare
Previous Post

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Next Post

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies