தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 2, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொழிலாளர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும் இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் இணைக்கும் வகையில் SPREE எனும் திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் SPREE திட்டம் என்றால் என்ன? அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

பத்து அல்லது பத்திற்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு தொழில் செய்யும் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கும் வகையில் SPREE என்ற புதிய திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களை எந்தவித கட்டணமுமின்றி SPREE திட்டத்தின் மூலம் இ.எஸ்.ஐ- இல் இணைந்து தொழிலாளர் நலன் சார்ந்த பாதுகாப்பை பெறமுடியும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இ எஸ் ஐ மருத்துவமனை மட்டுமல்லாது அவற்றோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள மருத்துவமனைகளிலும் அனைத்துவிதமான சிகிச்சைகளையும் தொழிலாளர் பெற ஏதுவாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக இதற்கான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அந்தந்த மண்டல அலுவலகங்களில் இதற்கான உதவி மையங்களும் திறக்கப்பட உள்ளன.  தொழிலாளர்கள் அதிகளவில் இருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் ஏற்கனவே சுமார் 50 லட்சம் பேர் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைந்து பயன்பெற்று வரும் நிலையில், மேலும் பல தொழிலாளர்களை இணைக்கும் மத்திய அரசின் முயற்சிக்குத் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது

இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைந்த தொழிலாளி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் பட்சத்தில் அவரை சார்ந்துள்ள குடும்பத்தினர் தங்களின் வாழ்நாள் முழுவதும் எவ்வித சிரமமுமின்றி வாழ உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. பெற்றோர்களை இழந்த வாரிசுகளுக்கு மட்டுமல்ல, வாரிசுகளை இழந்த பெற்றோர்களுக்கும் உதவித் தொகை கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உச்ச வரம்பில்லாத சிகிச்சைக்கான செலவு, தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறும் வசதி என மருத்துவம் சார்ந்த செலவினங்களிலிருந்து தொழிலாளர்களை மீட்கும் வரப்பிரதாசமாக இந்த SPREE திட்டம் அமைந்திருக்கிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் தொழிலாளர்கள் அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: மத்திய அரசின் அசத்தல் திட்டம்Coimbatore: Aadi festival at Karumariamman Templeஆடி திருவிழா கோலாகலம்Concern for workers' welfare: Central government's amazing scheme
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Next Post

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies