விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் - கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!
Aug 12, 2026, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 2, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாவட்டத்தின் பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு சாகுபடியும் வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாய நீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்கு மதுரை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, கள்ளந்திரி, சிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக பாசன வசதியும், மேலூர், வெள்ளலூர், கீழவளவு, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் ஒருபோக பாசனமும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சாகுபடிக்கு ஆதாரமான பாசன கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாகக் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒத்தக்கடை நகர் பகுதியில் செல்லும் இந்த பாசன கால்வாய்களில் மதுரை மாநகராட்சியின் திட மற்றும் திரவக் கழிவுகள் நேரடியாகக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் குடியிருப்புகளின் மொத்த கழிவுகளும் பாசன கால்வாயில் கொட்டப்படுவதால் விவசாயத்திற்குச் செல்லும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதோடு மருத்துவக் கழிவுகளும், மது பாட்டில்களும் அதிகளவு காணப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்தின் மகசூலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீர் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பலர் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் விவசாய சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், பாசனக் கால்வாய்களில் கழிவுநீர் கலக்கும் நிலை விளைநிலங்களை விற்பனை மனைகளாக மாற்றும் சூழலுக்குத் தள்ளியுள்ளது.

ஒவ்வொரு முறையும் பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அக்கால்வாய்களை தூர்வாராவதோடு, இதுபோன்ற கழிவுகள் கலக்காவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: tn agricultureவிவசாயத்தை கைவிடும் விவசாயிகள்நிலத்தடி நீர் பாதிப்புFarmers abandoning agriculture: Groundwater is being affected by sewage flowing into irrigation canals
Share
Tweet
SendShare
Previous Post

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Next Post

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies