நெல்லை பாளையங்கோட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கி போலச் செயல்படும் என்று தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் நிறைவேற்ற முடியாத திமுக அரசால், நல்லாட்சி தர முடியவில்லை என்றும் விமர்சித்தார்.