முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!
Jan 14, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றி பெறவே அதிக வாய்ப்பு என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தனது மிரட்டல் வேகப்பந்து வீச்சால் இந்திய அணிக்கு முகமது சிராஜ் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில், வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து பவுலர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், இந்திய அணி அந்த வெற்றியைத் தட்டிப் பறித்து தன்வசப்படுத்தி இருக்கிறது.

ஓவல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 3 விக்கெட்களையும், பிரஷீத் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இங்கிலாந்து அணியை 367 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

போட்டியின் 4வது நாளில் ஜோ ரூட் மற்றும் ஹேரி ப்ரூக் ஆகியோர் சதம் விளாசியது இந்திய அணியின் பந்து வீச்சு வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கிய நிலையில், 5வது நாளில் ஆடுகளம் சாதகமாக இருந்ததால், இந்தியப் பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்தனர். ஓவல் மைதானத்தில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் நிகழ்த்திய மாயாஜாலம் பற்றி கேப்டன் ஷுப்மன் கில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, நமது அணிக்குக் கிடைத்தது போன்ற பவுலர்கள் உலகின் பெரும்பாலான அணிகளில் இல்லை எனத் தெரிவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ், ஓவல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜுக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணாவும் இரு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்கள் இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக இருந்தாலும், கடைசி நாளின் ஒரு மணி நேரத்திற்குள் இந்திய அணி, போட்டியின் போக்கையே மாற்றும் வகையில் செயல்பட்டு, வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமும் ஏகோபித்த பாராட்டை பெற்று வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணி வீரர் ஹாரி ப்ரூக்கும் தொடர் நாயகன் விருதினை பெற்றனர். அதற்கான காரணம் என்னவெனில், இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் நீண்ட கால பாரம்பரியமாகத் தொடர் நாயகன் விருது இரு அணிகளின் வீரருக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Cricketindia vs englandMohammed Siraj's intimidating bowling: India's stunning victory in the Oval Test match
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Next Post

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies