முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!
Sep 22, 2025, 01:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றி பெறவே அதிக வாய்ப்பு என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தனது மிரட்டல் வேகப்பந்து வீச்சால் இந்திய அணிக்கு முகமது சிராஜ் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில், வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து பவுலர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், இந்திய அணி அந்த வெற்றியைத் தட்டிப் பறித்து தன்வசப்படுத்தி இருக்கிறது.

ஓவல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 3 விக்கெட்களையும், பிரஷீத் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இங்கிலாந்து அணியை 367 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

போட்டியின் 4வது நாளில் ஜோ ரூட் மற்றும் ஹேரி ப்ரூக் ஆகியோர் சதம் விளாசியது இந்திய அணியின் பந்து வீச்சு வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கிய நிலையில், 5வது நாளில் ஆடுகளம் சாதகமாக இருந்ததால், இந்தியப் பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்தனர். ஓவல் மைதானத்தில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் நிகழ்த்திய மாயாஜாலம் பற்றி கேப்டன் ஷுப்மன் கில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, நமது அணிக்குக் கிடைத்தது போன்ற பவுலர்கள் உலகின் பெரும்பாலான அணிகளில் இல்லை எனத் தெரிவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ், ஓவல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜுக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணாவும் இரு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்கள் இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக இருந்தாலும், கடைசி நாளின் ஒரு மணி நேரத்திற்குள் இந்திய அணி, போட்டியின் போக்கையே மாற்றும் வகையில் செயல்பட்டு, வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமும் ஏகோபித்த பாராட்டை பெற்று வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணி வீரர் ஹாரி ப்ரூக்கும் தொடர் நாயகன் விருதினை பெற்றனர். அதற்கான காரணம் என்னவெனில், இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் நீண்ட கால பாரம்பரியமாகத் தொடர் நாயகன் விருது இரு அணிகளின் வீரருக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Cricketindia vs englandMohammed Siraj's intimidating bowling: India's stunning victory in the Oval Test match
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Next Post

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

Related News

யோவ் யாரா இருந்தா என்ன? அவர் வந்தா வரட்டும் : உடன்பிறப்புகளுக்கு டோஸ் விட்ட திருச்சி சிவா – சிறப்பு தொகுப்பு!

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

சென்னையில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பு சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி!

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் : இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா?

Load More

அண்மைச் செய்திகள்

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

நெமிலி அருகே நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

பிரதமர் மோடி பிறந்த நாள் – புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

நவராத்திரி பண்டிகை – அயோத்தியில் களைகட்டிய அலங்கார பொருட்கள் விற்பனை!

ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது – வானதி சீனிவாசன்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – ஜிஎஸ்டி வரிகுறைப்பு அனைத்துப் பிரிவினருக்கும் பலன் அளிக்கும் என உறுதி!

நடிகர்களை விமர்சிக்கும்   யூ-டியூபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நடிகர் சங்கம்

ஆசிய கோப்பை டி/ 20 கிரிக்கெட் – இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி வழிபாடு!

சவுதி அரேபியாவில் வெளுத்து வாங்கிய மழை – வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்!

ஹரியானாவில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சி – கண்டு வியந்த பார்வையாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies