குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தென்காசி நகராட்சிக்குட்பட்ட 5ஆவது வார்டில் குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லையெனக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.