பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி - அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!
Nov 11, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களைத் துல்லியமாகத் தாக்கி, சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையே வியக்கவைத்தது இந்தியாவின் பிரம்மோஸ் க்ரூஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை. இது, அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணையை விட  வலிமை கொண்ட உலகின் நம்பகமான ஏவுகணைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

எதிரியின் எல்லைக்குள் நீண்ட தொலைவில் இருக்கும் இலக்குகளைத் தாக்கும் நவீனப் போரில் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் போர் விமானத்துக்கும், விமானிக்கும் எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் வெற்றியை உறுதி செய்கின்றன க்ரூஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள்.

அழிக்க வேண்டிய நவீன போரில், ஒரு விமானியை ஆபத்தில் ஆழ்த்தாமல், குரூஸ் ஏவுகணைகள் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக,  உலகளாவிய ஏவுகணை சந்தையில், அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை முன்னணியில் இருந்து வந்தது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை, அமெரிக்காவின்  டோமாஹாக் ஏவுகணைக்குச் சரியான போட்டியாக உருவெடுத்துள்ளது.  சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவி,பாகிஸ்தானின் விமானத்தளங்களைத் தகர்த்து எறிந்த பிரம்மோஸ் ஏவுகணையின் மகாசக்தி,  உலக  பாதுகாப்பு சந்தையில் இந்திய ஏவுகணையைக் கொள்முதல் செய்வதற்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இன்றைய உலகில் மிகவும் பிரபலமான இரண்டு க்ரூஸ் ஏவுகணைகள் எவை என்று கேட்டால், அவை இந்தியாவின் பிரம்மோஸ் மற்றும் அமெரிக்காவின் டோமாஹாக் ஆகும்.  இதில் டோமாஹாக்கின் விலை சுமார்  16.6 கோடி ரூபாயாகும். ஆனால், பிரம்மோஸ் ஏவுகணையின் விலை 34 கோடி ரூபாயாகும். அதிக விலை இருந்தபோதிலும், பிரம்மோஸின்  செயல்திறன் பிரமிக்க வைப்பதாகும்.

பிரம்மோஸ் ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும். இதன் வேகம், MACH 3.0 ஆகும். அதாவது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிகமான வேகத்தில் பறக்கும். இதனால், பிரம்மோஸை கண்காணித்துத்  தாக்குவதற்கு எதிரியின் ரேடாருக்கு நேரமே கிடைக்காது.  ஆகவே எதிரி நாட்டுக்குள் மிகவும் பாதுகாக்கப்பட்ட இலக்குகளையும் குறிவைத்து துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

இதற்கு நேர்மாறாக, டோமாஹாக் ஒரு சப்சோனிக் ஏவுகணையாகும். இதன் வேகம்  MACH 0.74 ஆகும்.  இது பிரம்மோஸின் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் தரைக்கு மேலே மிகக் குறைந்த உயரத்தில்,  பறக்கும் திறன் கொண்டதாகும். இதுவும் எதிரி ரேடாரின் கண்ணுக்குப் புலனாகாமல் பறந்து இலக்குகளைத் தாக்கும் வல்லமை உடையதாகும்.

டோமாஹாக் ஏவுகணை குறிப்பாகத் தாக்குதல் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,400 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும்.  ஆனால், பிரம்மோஸ், இப்போதைக்கு  800 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடியதாகும்.

தாக்குதல் துல்லியத்தை அடைவதற்கு இரண்டு ஏவுகணைகளும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. அதிநவீன பல அடுக்கு வழிகாட்டுதல் அமைப்பை டோமாஹாக் பயன்படுத்துகிறது. இதில் GPS, inertial navigation system, terrain contour matching மற்றும் Digital Scene Matching Area Correlation ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

GPS-மறுக்கப்பட்ட சூழல்களில் கூட  துல்லியமான இலக்குகளைத் தாக்குவதை இந்த தொழில்நுட்பங்கள்   உறுதி செய்கின்றன. பிரம்மோஸ், செயலற்ற வழிசெலுத்தல், செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மற்றும் செயலில் உள்ள ரேடார் ஹோமிங் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இவை நகரும் மற்றும் நிலையான இலக்குகளுக்கு எதிராகக் குறிப்பிடத்தக்கத் துல்லியத்தைப் பிரம்மோஸ் ஏவுகணைக்கு வழங்குகிறது.

1991 முதல் வளைகுடாப் போர், சிரியா மற்றும் ஏமன் போன்ற போர்களில் 2,300க்கும் மேற்பட்ட டோமாஹாக்,  ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. பிரம்மோஸ் ஏவுகணை, ஆப்ரேஷன் சிந்தூரில், அதிரடி தாக்குதல் நடத்தி தன் போர்திறனை வெளிப்படுத்தியுள்ளது. விரைவில் 1500 கிலோமீட்டர் வரம்பு மற்றும் mach 8 வேகத்தில் பயணிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை  எதிர்பார்க்கப்படுகிறது.

mach 3 வேகத்தில் பறக்கும்,  ராம்ஜெட் தொழில்நுட்பத்துடன் கூடிய சூப்பர்சோனிக் டோமாஹாக் ஏவுகணையும் தயாராகி உள்ளது. இது வெறும் ஆயுதப் போட்டி மட்டுமல்ல, உலகளாவிய பாதுகாப்பு சக்தியை மறுசீரமைக்கும் நடவடிக்கை ஆகும்.  நீண்ட காலமாகவே, அதிநவீன ஆயுதங்களுக்காக அமெரிக்க நட்பு நாடுகள் எல்லாம் அமெரிக்காவையே நம்பி இருந்தன.

இன்று, வியட்நாம் முதல் எகிப்து வரையிலான நாடுகள், அமெரிக்காவை விட்டுவிலகி இந்தியாவிடம் ஆயுதங்களைக் கொள்முதல் செய்கின்றன.  நவீனப் போர்க்களத்தில், எந்த ஏவுகணை சிறந்தது என்பது கேள்வி இல்லை.  தனது போர்க்களத்துக்கு எந்த ஏவுகணை  பொருத்தமானது? என்பது தான் கேள்வி.

இத்தகைய கேள்விகளுடன் இருக்கும் நாடுகளுக்கு ஏற்ப ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது. சொல்லப் போனால் மேற்கத்திய ஏகபோகங்களுக்கு இந்தியா சவால் விடுவதை பிரம்மோஸ் நிரூபித்துள்ளது.

Tags: indian armyBrahmos vs Tomahawk: Cruise missile race - India surpasses Americaindia vs americaக்ரூஸ் ஏவுகணைஅமெரிக்காவை மிஞ்சும் இந்தியா
ShareTweetSendShare
Previous Post

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

Next Post

மின்சார ரயில்களில் கூலி பட போஸ்டர்கள்!

Related News

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies