தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!
Sep 23, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை அருகே இருக்கும் மலைக்கிராம மக்கள் சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்களை நாடும் அரசியல் கட்சியினரைக் கண்டிக்கும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக மலைக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அமைந்திருக்கும் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு செல்ல வேண்டுமெனில் தொழுவபெட்ட வழியாக அதற்கு இடையில் இருக்கும் குள்ளபட்டி, கவுனூர், டி.பழையூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை கடந்து தான் செல்ல வேண்டும்.

துளியளவும் சாலைவசதி இல்லாத இத்தகைய கிராமங்களைக் கடந்து செல்வதே அப்பகுதி மக்களுக்குச் சவால் மிகுந்த காரியமாக அமைந்துள்ளது. சாலை மட்டுமல்ல குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் இப்பகுதி மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

தொளுவபெட்டாவைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் மட்டும் சுமார் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைவசதியும், பேருந்து வசதியும் இல்லாத காரணத்தினால் சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழலுக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில், அதிகளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது

ஒவ்வொரு தேர்தலின் போது மட்டுமே தங்களின் பகுதிக்கு வரும் அரசியல் கட்சியினர், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என வாக்குறுதி கொடுப்பதும், தேர்தல் முடிவடைந்த பின்பு இப்பகுதிக்கே வராமல் ஏமாற்றுவதுமே தொடர்கதையாகி வருகிறது. பலமுறை வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்களால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போவதாக மலைக்கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.

மலைக்கிராம மக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமை என்பதை உணர்ந்து உடனடியாக சாலைவசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: tn news todayDecision to boycott the election: Villagers suffering without basic amenities
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

Related News

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்!

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் கருகி வரும் மக்காச்சோள பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

வாழப்பாடி அருகே விசாரணைக்கு சென்ற தலைமை காவலர் மீது தாக்குதல்!

முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!

கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 4 முறைக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

இத்தாலி : பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறிய கோரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies