தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை அருகே இருக்கும் மலைக்கிராம மக்கள் சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்களை நாடும் அரசியல் கட்சியினரைக் கண்டிக்கும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக மலைக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அமைந்திருக்கும் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு செல்ல வேண்டுமெனில் தொழுவபெட்ட வழியாக அதற்கு இடையில் இருக்கும் குள்ளபட்டி, கவுனூர், டி.பழையூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை கடந்து தான் செல்ல வேண்டும்.

துளியளவும் சாலைவசதி இல்லாத இத்தகைய கிராமங்களைக் கடந்து செல்வதே அப்பகுதி மக்களுக்குச் சவால் மிகுந்த காரியமாக அமைந்துள்ளது. சாலை மட்டுமல்ல குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் இப்பகுதி மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

தொளுவபெட்டாவைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் மட்டும் சுமார் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைவசதியும், பேருந்து வசதியும் இல்லாத காரணத்தினால் சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழலுக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில், அதிகளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது

ஒவ்வொரு தேர்தலின் போது மட்டுமே தங்களின் பகுதிக்கு வரும் அரசியல் கட்சியினர், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என வாக்குறுதி கொடுப்பதும், தேர்தல் முடிவடைந்த பின்பு இப்பகுதிக்கே வராமல் ஏமாற்றுவதுமே தொடர்கதையாகி வருகிறது. பலமுறை வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்களால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போவதாக மலைக்கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.

மலைக்கிராம மக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமை என்பதை உணர்ந்து உடனடியாக சாலைவசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: tn news todayDecision to boycott the election: Villagers suffering without basic amenities
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies