தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!
Sep 12, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை அருகே இருக்கும் மலைக்கிராம மக்கள் சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்களை நாடும் அரசியல் கட்சியினரைக் கண்டிக்கும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக மலைக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அமைந்திருக்கும் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு செல்ல வேண்டுமெனில் தொழுவபெட்ட வழியாக அதற்கு இடையில் இருக்கும் குள்ளபட்டி, கவுனூர், டி.பழையூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை கடந்து தான் செல்ல வேண்டும்.

துளியளவும் சாலைவசதி இல்லாத இத்தகைய கிராமங்களைக் கடந்து செல்வதே அப்பகுதி மக்களுக்குச் சவால் மிகுந்த காரியமாக அமைந்துள்ளது. சாலை மட்டுமல்ல குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் இப்பகுதி மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

தொளுவபெட்டாவைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் மட்டும் சுமார் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைவசதியும், பேருந்து வசதியும் இல்லாத காரணத்தினால் சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழலுக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில், அதிகளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது

ஒவ்வொரு தேர்தலின் போது மட்டுமே தங்களின் பகுதிக்கு வரும் அரசியல் கட்சியினர், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என வாக்குறுதி கொடுப்பதும், தேர்தல் முடிவடைந்த பின்பு இப்பகுதிக்கே வராமல் ஏமாற்றுவதுமே தொடர்கதையாகி வருகிறது. பலமுறை வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்களால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போவதாக மலைக்கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.

மலைக்கிராம மக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமை என்பதை உணர்ந்து உடனடியாக சாலைவசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: tn news todayDecision to boycott the election: Villagers suffering without basic amenities
Share
Tweet
SendShare
Previous Post

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

Related News

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies