தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!
Jul 29, 2026, 12:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை அருகே இருக்கும் மலைக்கிராம மக்கள் சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்களை நாடும் அரசியல் கட்சியினரைக் கண்டிக்கும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக மலைக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அமைந்திருக்கும் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு செல்ல வேண்டுமெனில் தொழுவபெட்ட வழியாக அதற்கு இடையில் இருக்கும் குள்ளபட்டி, கவுனூர், டி.பழையூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை கடந்து தான் செல்ல வேண்டும்.

துளியளவும் சாலைவசதி இல்லாத இத்தகைய கிராமங்களைக் கடந்து செல்வதே அப்பகுதி மக்களுக்குச் சவால் மிகுந்த காரியமாக அமைந்துள்ளது. சாலை மட்டுமல்ல குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் இப்பகுதி மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

தொளுவபெட்டாவைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் மட்டும் சுமார் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைவசதியும், பேருந்து வசதியும் இல்லாத காரணத்தினால் சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழலுக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில், அதிகளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது

ஒவ்வொரு தேர்தலின் போது மட்டுமே தங்களின் பகுதிக்கு வரும் அரசியல் கட்சியினர், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என வாக்குறுதி கொடுப்பதும், தேர்தல் முடிவடைந்த பின்பு இப்பகுதிக்கே வராமல் ஏமாற்றுவதுமே தொடர்கதையாகி வருகிறது. பலமுறை வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்களால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போவதாக மலைக்கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.

மலைக்கிராம மக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமை என்பதை உணர்ந்து உடனடியாக சாலைவசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: tn news todayDecision to boycott the election: Villagers suffering without basic amenities
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies