ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!
Sep 24, 2025, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடிப்படை வசதிகளின்மை மற்றும் பாதுகாப்பு அச்சத்தால் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருமே புலம்பெயரும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அந்த கிராமம் எங்கு உள்ளது ? மக்கள் அனைவரும் வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆள் நடமாட்டமே இல்லாத அளவிற்குக் காட்சியளிக்கும் இந்த நாட்டாகுடி கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக 50க்கும் அதிகமான குடும்பங்களும் 200க்கும் அதிகமான மக்களும் வசித்து வந்துள்ளனர். காலப்போக்கில் அடிப்படை வசதிகள் காரணத்தினாலும், தொழில் சார்ந்தும்  பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராகக் கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அதோடு, இப்பகுதியில் அடுத்தடுத்து அரங்கேற்கும் படுகொலைச் சம்பவங்களும் பொதுமக்கள் வெளியேற முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது

பள்ளி, மருத்துவமனை, பேருந்து வசதி எனப் பொதுமக்களுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்பதோடு, குடிநீர் விநியோகம் கூட முறையாக இல்லை என்பதால் 50 குடும்பங்கள் வசித்து வந்த நாட்டாகுடியில் தற்போது நான்கு பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 4 ஆயிரத்து 835 கோடிக்கும் மேல் தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்த வசதியை ஏற்படுத்தித் தராத தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலையின் விமர்சனத்தையடுத்து அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊரக வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரடியாக நாட்டாகுடி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்க்கான இணைப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அதற்கான குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அதிகாரிகளின் உத்தரவின்படி உடனடியாக அனைத்து குழாய்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதோடு இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றத்திற்குப் பயமும், தொழிலுமே காரணம் எனவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

200க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வந்த ஊரில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரத்தவறிய மாவட்ட நிர்வாகத்தால் ஒரு கிராமமே புலம்பெயரும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. சிவகங்கை மட்டுமல்ல தமிழகத்தில் இன்னும் அடிப்படை வசதிகளின்றி இருக்கும் கிராமங்களுக்கு இனியாவது அவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: The entire village is empty: People left their homes due to lack of basic facilitiesகிராமமே காலிநாட்டாகுடி கிராமம்
ShareTweetSendShare
Previous Post

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

Next Post

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

Related News

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை : வணிக வளாகங்களுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்!

நெல்லை – சென்னை வந்தே பாரத் 20 பெட்டியுடன் இன்று முதல் சேவை துவக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.2 கோடி அபராதம் ரத்து!

நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவிற்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப் பிரதேசம் : மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்!

மேற்குவங்கம் : தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்!

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி!

உத்தரப் பிரதேசம் : மலைப் பாம்பிடம் சிக்கி தவித்த பாம்பு பிடி வீரர்!

என் மத உணர்வை புண்படுத்தியதற்கு நன்றி – சாக்‌ஷி அகர்வால்

தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைப்பு – மத்திய அரசுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் நன்றி!

தஞ்சாவூர் : நவராத்திரியை ஒட்டி வீடு, வணிக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள கொலு!

கேரளா : சிறுவனை கடித்து இழுத்து செல்ல முயன்ற நரி!

உத்தரப்பிரதேசம் : மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞர் கைது!

13,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய மூதாட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies