நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் - சிதிலமடைந்த வாழ்க்கை!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 08:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை அருகே சேதமடைந்த குடியிருப்புகளுக்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய குடியிருப்புகள் கட்டித்தருகிறோம் என்ற அரசு அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி குடியிருப்பை விட்டு வெளியேறிய நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுக்காவிற்கு உட்பட்ட சக்கிமங்கலம் பகுதியில் சுமார் 350 நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகக் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு கட்டிக் கொடுத்த கான்கிரீட் தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் தார்ப்பாயைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

குறிப்பிட்ட 71 வீடுகளும் மக்கள் வசிக்கத் தகுதியற்ற நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை விட்டு வெளியேறினால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை நம்பி சமுதாயக்கூடத்தில் குடி பெயர்ந்த மக்களுக்கு பத்து மாதங்கள் கடந்தும் எந்தவித உதவியும் செய்து தரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது

ஊர் ஊராகச் சென்று நாடோடியாக வாழ்ந்து வந்த நரிக்குறவர்கள் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளைப் பயன்படுத்தி நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்கி ஊசி மணி பாசிகளை விற்று தொழில் செய்து வந்தனர். அவர்களுக்கான குடியிருப்பைப் புதுப்பிப்பதற்கான எந்தவித பணிகளும் நடைபெறாத காரணத்தினால் சமுதாயக்கூடங்களிலும், மரத்தடிகளிலும் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்

சேதமடைந்த வீட்டிற்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரங்களில் மட்டுமே தங்களை நாடி வரும் அரசியல் வாதிகள், தாங்கள் துயரப்படும் நேரங்களிலும் வந்து பார்க்க வேண்டும் என நரிக்குறவ சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: சிதைந்த குடியிருப்புகள்சிதிலமடைந்த வாழ்க்கை!மதுரைநரிக்குறவ மக்கள்People of Narikuurava in hellish agony: Destroyed homesruined lives
Share
Tweet
SendShare
Previous Post

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Next Post

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies