நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் - சிதிலமடைந்த வாழ்க்கை!
Sep 24, 2025, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அருகே சேதமடைந்த குடியிருப்புகளுக்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய குடியிருப்புகள் கட்டித்தருகிறோம் என்ற அரசு அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி குடியிருப்பை விட்டு வெளியேறிய நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுக்காவிற்கு உட்பட்ட சக்கிமங்கலம் பகுதியில் சுமார் 350 நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகக் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு கட்டிக் கொடுத்த கான்கிரீட் தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் தார்ப்பாயைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

குறிப்பிட்ட 71 வீடுகளும் மக்கள் வசிக்கத் தகுதியற்ற நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை விட்டு வெளியேறினால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை நம்பி சமுதாயக்கூடத்தில் குடி பெயர்ந்த மக்களுக்கு பத்து மாதங்கள் கடந்தும் எந்தவித உதவியும் செய்து தரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது

ஊர் ஊராகச் சென்று நாடோடியாக வாழ்ந்து வந்த நரிக்குறவர்கள் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளைப் பயன்படுத்தி நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்கி ஊசி மணி பாசிகளை விற்று தொழில் செய்து வந்தனர். அவர்களுக்கான குடியிருப்பைப் புதுப்பிப்பதற்கான எந்தவித பணிகளும் நடைபெறாத காரணத்தினால் சமுதாயக்கூடங்களிலும், மரத்தடிகளிலும் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்

சேதமடைந்த வீட்டிற்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரங்களில் மட்டுமே தங்களை நாடி வரும் அரசியல் வாதிகள், தாங்கள் துயரப்படும் நேரங்களிலும் வந்து பார்க்க வேண்டும் என நரிக்குறவ சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: சிதைந்த குடியிருப்புகள்சிதிலமடைந்த வாழ்க்கை!மதுரைநரிக்குறவ மக்கள்People of Narikuurava in hellish agony: Destroyed homesruined lives
ShareTweetSendShare
Previous Post

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Next Post

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

Related News

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

சென்னையில் உள்ள PIB அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

காவல் நிலைய மரணம் : உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா : சிறுவனை கடித்து இழுத்து செல்ல முயன்ற நரி!

உத்தரப்பிரதேசம் : மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞர் கைது!

13,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய மூதாட்டி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!

துபாய் : தீயை அணைக்க பிரத்யேக டிரோன்கள்!

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனி தனித்து நிற்கிறது : ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன்

கொடைக்கானல் : கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆய்வு செய்த பாஜக குழு!

ஜிஎஸ்டி குறைப்பு முதல் நாளில் கார்களின் விற்பனை உயர்வு!

தெலங்கானா : பப்பிற்குள் புகுந்து பவுன்சர்களை தாக்கிய இளைஞர்கள்!

ரகசா அதிதீவிர புயலால் பலத்த சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies