நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் - சிதிலமடைந்த வாழ்க்கை!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அருகே சேதமடைந்த குடியிருப்புகளுக்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய குடியிருப்புகள் கட்டித்தருகிறோம் என்ற அரசு அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி குடியிருப்பை விட்டு வெளியேறிய நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுக்காவிற்கு உட்பட்ட சக்கிமங்கலம் பகுதியில் சுமார் 350 நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகக் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு கட்டிக் கொடுத்த கான்கிரீட் தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் தார்ப்பாயைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

குறிப்பிட்ட 71 வீடுகளும் மக்கள் வசிக்கத் தகுதியற்ற நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை விட்டு வெளியேறினால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை நம்பி சமுதாயக்கூடத்தில் குடி பெயர்ந்த மக்களுக்கு பத்து மாதங்கள் கடந்தும் எந்தவித உதவியும் செய்து தரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது

ஊர் ஊராகச் சென்று நாடோடியாக வாழ்ந்து வந்த நரிக்குறவர்கள் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளைப் பயன்படுத்தி நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்கி ஊசி மணி பாசிகளை விற்று தொழில் செய்து வந்தனர். அவர்களுக்கான குடியிருப்பைப் புதுப்பிப்பதற்கான எந்தவித பணிகளும் நடைபெறாத காரணத்தினால் சமுதாயக்கூடங்களிலும், மரத்தடிகளிலும் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்

சேதமடைந்த வீட்டிற்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரங்களில் மட்டுமே தங்களை நாடி வரும் அரசியல் வாதிகள், தாங்கள் துயரப்படும் நேரங்களிலும் வந்து பார்க்க வேண்டும் என நரிக்குறவ சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: சிதைந்த குடியிருப்புகள்சிதிலமடைந்த வாழ்க்கை!மதுரைநரிக்குறவ மக்கள்People of Narikuurava in hellish agony: Destroyed homesruined lives
ShareTweetSendShare
Previous Post

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Next Post

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies