அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் - புவிசார் அரசியலில் புதிய வியூகம்!
Nov 9, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையே மோதல்  அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் அங்குத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அரசு முறை உயர்மட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து விவாதிக்க டோவல் மூத்த ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை  நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பின் கூடுதலாக ரஷ்யாவிடம் இருந்து  S-400 பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்காக இந்தியா முடிவெடுத்துள்ளது. மேலும்,  ரஷ்ய Su-57 போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் உட்பட பல்வேறு வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கும் இந்தியா மீதான  வரிகளை  உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.  இதற்குப் பதிலளித்த இந்தியா, ரஷ்ய எண்ணெய்யை வாங்குவது நாட்டின்  தேவை என்று கூறியதோடு, இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்று ஆதாரத்துடன் கூறியுள்ளது. மேலும், உலகச் சந்தையில்  அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ரஷ்யாவுடனான இந்திய உறவு பாரம்பரியம் மிக்கதாக விளங்குகிறது.  சுதந்திர இந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தூதர் ரஷ்யாவுக்குத் தான் நியமிக்கப்பட்டார்.  அன்றிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, கச்சா எண்ணெய் வர்த்தகத்தை விடவும் ஆழமாக உள்ளது.

1965ம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரின்போது,  அப்போது சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா மத்தியஸ்தம் செய்தது. தொடர்ந்து, அதற்கு அடுத்த ஆண்டு, தாஷ்கண்ட்டில் உச்சி மாநாட்டில் இந்தியா- பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தம் ஏற்படவும் உதவியது.

1971 ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரின் போது, இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நின்றது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் ,சோவியத் யூனியனுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வளர தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு தனது முதல் அணு ஆயுத சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியபோதும் , சோவியத் யூனியன் இந்தியாவுடனான உறவைத் துண்டிக்க வில்லை.

பனிப்போருக்குப் பின்னும் இந்திய- ரஷ்ய உறவுகள் வலிமை பெற்றன. 1990களின் முற்பகுதியில், இந்திய இராணுவ ஆயுதங்களில் சுமார் 70 சதவீதமும்,  விமானப்படையில் 80 சதவீதமும், கடற்படையில் 85 சதவீதமும் சோவியத் நாட்டு ஆயுதங்களே இருந்தன. இப்போது மொத்த ஆயுத கொள்முதலில் ரஷ்யாவின் பங்கு 36 சதவீதமாகும்.

இந்தியாவின் மொத்த  கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 40 சதவீதமாகும். இது நான்கு ஆண்டுகளுக்கு முன்  வெறும் இரண்டு சதவீதமாக இருந்தது. இரு நாடுகளும் அணுசக்தித் துறையிலும்  ஒத்துழைக்கின்றன. குறிப்பாக, ரஷ்ய அரசு  இந்தியாவில் ஆறு அணுசக்தி உலைகளை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Chennai-Vladivostok maritime corridor மற்றும்  International North-South Transport Corridor என்ற வர்த்தகத்துக்கான வழித்தடத்தை இருநாடுகளும் செயல்படுத்தி வருகிறது. மேலும், இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்க இருநாடுகளும் இலக்கு வைத்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர் சூழலிலும், இந்தியா ரஷ்யாவுடனான தனது உறவுகளைப் பேணி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ரஷ்யாவுக்கான மின்-விசாக்கள்  இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும்,  விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்ல  இந்தியர்களுக்கு  அனுமதி கொடுப்பது பற்றியும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி- அதிபர் புதின் சந்திப்புக்குப் பிறகு,இருநாடுகளுக்குமான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதால், இந்தியா மீது கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியா,ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது என்றும், ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அமெரிக்காவுக்குக் கவலையில்லை என்றும்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும்  குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, அவர், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ரஷ்யா செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நிலையான உறவை, இந்தியா- ரஷ்யா ஆகிய நாடுகள் பேணி வருகின்றன. உலக அரசியலில் இது ஒரு மாபெரும் சாதனை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: ரஷ்யாவில் அஜித் தோவல்ரஷ்ய Su-57 போர் விமானங்கள்usa vs indiaPM ModirussiaS-400Ready to meet the American threat: Ajit Doval in Russia - New strategy in geopolitics
ShareTweetSendShare
Previous Post

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

Next Post

இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி மேலும் 25 % அதிகரிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

Related News

தெலங்கானா : ஊருக்குள் சுற்றித் திரிந்த 2,000க்கும் அதிகமான கோழிகள்!

கேரளா : பைக் சாகசம் – வாகன ஓட்டிகள் அச்சம்!

ஜம்மு-காஷ்மீர் : சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை!

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

Load More

அண்மைச் செய்திகள்

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் சிறையில் அடைப்பு!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை – காவல்துறை விளக்கம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies