₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் - பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் - புதிய போருக்கு தயாராகும் இந்தியா?
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முப்படைகளை நவீனப் படுத்துவதற்காக, பாதுகாப்புத் துறைக்கு 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில்  ஒப்புதல் அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில், 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

பாதுகாப்புக் கொள்கை மற்றும் மூலதனக் கொள்முதல் குறித்து முடிவெடுக்கும் மிக உயர்ந்த அமைப்பாகப் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் செயல்படுகிறது. தேவையை ஏற்றுக்கொள்வதற்கான ஒப்புதல், கொள்முதல் செயல்முறையின் முதல் படியாகும்

87 புதிய கனரக ஆயுதமேந்திய ட்ரோன்கள் மற்றும் 110 க்கும் மேற்பட்ட வான்வழி பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்ட மற்றும் ஆயுதம் ஏந்திச் செல்லக் கூடிய  87 ட்ரோன்கள் கொள்முதலுக்காக சுமார் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மேலும்,  மற்றொரு நிறுவனத்துக்காகப் பாதுகாப்பு உதிரிப் பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் உற்பத்தியாளர் பிரிவில், சுமார் 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.  10,800 கோடி ரூபாய் மதிப்பில்  110க்கும் மேற்பட்ட  பிரம்மோஸ் ஏவுகணைகளும் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.  கூடுதலாக, 650 கோடி ரூபாய்க்கு  எட்டு பிரம்மோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் உற்பத்திக்கும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளன.

BMP கவச வாகனங்களுக்கான தெர்மல் இமேஜர் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தெர்மல் இமேஜர் இரவு மற்றும் மோசமான வானிலையில் கூட வாகனத்தை இயக்க அனுமதிக்கும் ஒரு அதிநவீன கருவியாகும். இது கவச வாகனங்களின் இரவு நேர ஓட்டுநர் திறனை மேம்படுத்தும் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைக்கு அதிக இயக்கம் மற்றும் செயல்பாட்டு நன்மையை வழங்கும் என்று கூறப் பட்டுள்ளது.

முப்படைகளுக்கும்  நடுத்தர உயர நீண்ட தாங்கு திறன் கொண்டRemotely Piloted Aircraft கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. மலை ரேடார்கள் கொள்முதல் செய்வதற்கும் SAKSHAM/SPYDER ஆயுத அமைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய விமானப்படை ஒப்புதல் பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட SAKSHAM/SPYDER அமைப்பு, நாட்டின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் கடற்படைக்காக, பிரம்மோஸ் தீயணைப்பு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஏவுகணைகள் வாங்குவதற்கும், BARAK-1  பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை மேம்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

இது நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியக் கடற்படைக்கு மேம்பட்ட நவீனத்தினை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக,  C-17 மற்றும் C-130J கடற்படைகளின் பராமரிப்பு மற்றும் S-400 நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் விரிவான பராமரிப்பு ஒப்பந்தத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்முதல்கள் வான் பாதுகாப்பு, சிறந்த விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு கொள்முதல்களால்  பாதுகாப்புத் துறை பங்குகளில் ஏற்றத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ₹67 thousands crore Brahmos to state-of-the-art drones - Defence procurement approved - India preparing for a new war?பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள்போருக்கு தயாராகும் இந்தியா?Indiausaindia war
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

Next Post

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies