அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!
Mar 15, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நாட்டின்  விசாக்களை பெற இனி 13 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

AMERICA FIRST என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்துள்ள அதிபர் ட்ரம்ப், தொடக்கம் முதலே பல்வேறு விஷயங்களில் கெடுபிடி காட்டி வருகிறார். குறிப்பாக, விசா நடைமுறைகளில் அவர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தற்போது, அவர் கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

அமெரிக்காவுக்குத் தற்காலிகமாகப் பயணம் செய்பவர்கள், இனி 13 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்பதுதான், அந்த புதிய அறிவிப்பு. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2023ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்தவர்களில் பலர், விசா காலம் முடிவடைந்த நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தது. எனவே, இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இந்த டெபாசிட் நடைமுறையை ட்ரம்ப் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வர்த்தகம், சொத்துக்கள் வாங்குவது, விற்பது உள்ளிட்ட வணிக காரணங்களுக்காக அமெரிக்கா செல்பவர்கள் B-1 விசா வாங்க வேண்டும். அதேபோல, சுற்றுலா, யாரையேனும் சந்திப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்பவர்கள் பி2 விசா பெற வேண்டும். இந்த 2 விசாக்களை பெறுவதற்குத்தான் தற்போது டெபாசிட் செலுத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

விசா காலத்தைத் தாண்டி சட்டவிரோதமாகப் பலர் தங்குவதை, இந்த புதிய நடைமுறை தடுக்கும் என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்த மாதம் முதலே அமலுக்கு வரும் எனவும், அடுத்தாண்டு ஆகஸ்டு 5ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இந்தியா இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டால், அது அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களை வெகுவாக பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. 13 லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை. அத்தனை பெரிய தொகையைச் செலுத்தினால் மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைய முடியும் எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டே இந்த திட்டம் முன்மொழியப்பட்டபோதும், பைடன் அரசு இதனைச் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiausavisaNew restriction to travel to America: Visa only if you deposit Rs. 13 lakhஅமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடுரூ.13 லட்சம் டெபாசிட்
ShareTweetSendShare
Previous Post

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

Next Post

ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies