பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
Nov 10, 2025, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக நீதி என்பது பெயரில் இருப்பதை விட செயல்பாட்டில் இருப்பதே சிறந்தது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு. சீர்மரபினர் நலத்துறை, பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் மாணவர் விடுதிகளை “சமூகநீதி விடுதிகள் என்ற ஒரே குடையின் கீழ் இணைக்கும் திமுக அரசின் விளம்பரத் திட்டம் அபத்தமானது.

இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி. ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ நன்றாக ஓடுமா என்ற நகைச்சுவை வசனத்தைப் போல, போதிய ஆசிரியர்கள், குடிநீர், கழிவறை, தரமான உணவு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு அவற்றின் பெயரை மட்டும் மாற்றி வைத்து சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுவெளியில் சாதிரீதியிலான கருத்துகளை முன் வைக்கும் தலைவர்களைக் கட்சியில் வைத்துக் கொண்டு, சாதிய இயக்கங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, சாதியை ஒழிக்கப் போவதாக போலித்தன அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவிற்கு, பல போராட்டங்களாலும் உயிர்த் தியாகங்களாலும் பெறப்பட்ட சமூகப் பாதுகாப்பினை அழித்தொழிக்க எந்த உரிமையும் இல்லை.

கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கும் அரசு விடுதிகளை சீர்செய்வதில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் பெயர் மாற்றத்தைக் கொண்டு அவலத்தை மூடி மறைக்க முயல்வது ஒரு நல்ல தலைமைக்கு அழகல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, “சமூக நீதி விடுதி” என்ற பெயர் மாற்ற முடிவினைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கும் அரசு மாணவர் விடுதிகளை சீர்செய்வதில் ஆளும் அரசு கவனம் செலுத்த வேண்டுமெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நயினார் நாகேந்திரன்  வலியுறுத்தி உள்ளார்.

Tags: tnbjpசமூக நீதிSocial justice is better in action than in name: Nainar NagendranDMKMK Stalin
ShareTweetSendShare
Previous Post

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

Next Post

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

Related News

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

காட்டு யானையை வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : வனத்துறை

தர்மபுரி : நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

வியட்நாம் : கல்மேகி புயலால் சின்னாபின்னமான மீனவ கிராமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies