படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!
Mar 15, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகரில் மிகக்குறைந்த அளவில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகளால் பள்ளி செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி அபாயகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விபத்துகள் அரங்கேறுவதற்கு முன்பாக பள்ளி நேரங்களில் மட்டுமாவது கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை மாநகரில் ஆர் சி மேல்நிலைப்பள்ளி, தியாகராஜா ஆண்கள் மாடல் பள்ளி, நிர்மலா பெண்கள் பள்ளி என ஏராளமான அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளுக்கு மதுரை மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பேருந்தில் வந்து படித்துவிட்டு தினசரி வீடு திரும்புகின்றனர்.

இலவச பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்திப் பயணிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

கதவுகள் இல்லாத அரசுப்பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் அவ்வப்போது விழுந்து காயம் ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் அரங்கேறுவது தொடர்கதையாகி வருகிறது. மதுரை மாநகரில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமெனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளிக்குக் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதாலே ஆபத்து எனத் தெரிந்தும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயணிப்பதால் மற்ற பணிகளுக்காகப் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய இடையூறுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து நடைபெற்ற பின்னர் காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதலும், இழப்பீடும் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தமிழக அரசு, அந்த விபத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து முன்கூட்டியே கூடுதல் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Dangerous journey on stairs: Request to run additional buses for studentsபடிக்கட்டுகளில் அபாய பயணம்மதுரை மாநகரில் ஆர் சி மேல்நிலைப்பள்ளி
ShareTweetSendShare
Previous Post

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

Next Post

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies